ஓம் குருவே சரணம்!
இறைவனால் படைக்கப்பட்ட
எல்லா உயிர்களுக்கும் தம்முடைய சந்ததியை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற
தர்மம் இருக்கிறது. இதுவே எல்லா தர்மத்திற்கும் முதன்மையானது. சந்ததி விருத்தி
என்ற தர்மம் தலைப்பதர்க்ககவே, காமத்தை இறைவன் மனிதனின் மனதில் புகுத்தியுள்ளார்.
எனவே முறையான காமம் என்பதும் இறைவனின் பிரசாதமே.
“இறைவனை நோக்கி தவத்தில் ஈடுபட்டிருப்போர் தங்கள் சாதனையை எந்த
அளவிற்கு தீவிரமாக்குகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய மனம் இறைவனிடத்தில்
நல்ல எண்ணங்களில் நற்செயல்களில் குவிய ஆரம்பிக்கின்றது.”
“மனம் குவிந்தால் விந்து சுரக்கும்.. அதன் காரணமாக காம எண்ணங்கள்
மோலோங்கி நிற்பது இயற்கையே. அழுக்கான ஒரு கண்ணாடியைத் துடைத்து சுத்தம் செய்யும்
பொழுது அதில் பிரதிபலிக்கின்ற உருவங்கள் தெளிவடைவதுபோல, நல்ல எண்ணங்கள் வளர வளர
மனம் தெளிவடைகின்றது.
மனதில் பிரதிபலிக்கும் அணைத்து எண்ணங்களும் தெளிவடையும்போது நம்
பல்வேறு எண்ணங்களில் ஒன்றான காம எண்ணமும் தெளிவடைகின்றது. இதுவே உண்மை”
“மேலும் ஒரு சாதகன் குண்டலினி யோகம் பயிலும்போது ஜீவ சக்தியானது மூலாதாரத்தை
அடுத்துள்ள ஸ்வதிஸ்தான சக்கரத்தில் நிலை கொள்ளும்போது கட்டுக்கடங்காத காம
எண்ணங்கள் பெருகும். விபரீத ஆசை கட்டுக்கடங்காமல் கரை புரண்டு நிற்கும்.
இந்த காரணத்திற்காகவே தக்க சற்குருவின் வழிகாட்டுதல் இன்றி குண்டலினி யோகத்தை யாரும் பயில கூடாது என்ற
விதிமுறை உள்ளது.”
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
9994690117