Thursday, 6 November 2014

முடி வெட்டும் முறைகள்



வணக்கம் நண்பர்களே!

நாம் எப்பொழுதும் முடி வெட்டுதல், சவரம் செய்தல் மற்றும் நகம் வெட்டுதல் போன்ற காரியங்களை அவர் அவர் விருப்பம் போல் நேரம் கிடைக்கும் பொழுது செய்து கொள்கிறோம்.

ஆனால் இந்த மாதிரியான காரியங்களை நாள், நட்சத்திம், திதி பார்க்காமல் நம்முடைய சௌகர்யத்திற்கு செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் நமக்கு தீமையான விளைவுகளே ஏற்ப்படும்.

இதற்குண்டான வழிமுறைகளை “ஸ்ரீ குண்டலினி மஹரிஷி” அளித்துள்ளார்.

பரணி,கிருத்திகை,திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம்,கேட்டை, மூலம், பூராடம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் தலைமுடி, நகம் வெட்டுதல், சவரம் செய்தல் கூடாது.

நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் அவரவர் ராசிக்கு உண்டான சூன்ய திதி நாட்களிலும், ஆடி,புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி மாதங்களில் மேற்கண்ட காரியங்களை செய்யக் கூடாது.

ஸ்ரீ குண்டலினி மஹரிஷி அருளிய விதிமுறைகளை நாம் கடைபிடித்தால் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து எளிதாக நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.

ஆனால் நாம் இறைவனுக்கு பிரார்தனைக்காக முடியை காணிக்கையாக செலுத்தும் பொழுது மேற்கூறிய கட்டுப்பாடுகள் கிடையாது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

1 comment: