வணக்கம் நண்பர்களே!
உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுக்காக்க எளிய
வழிமுறைகளை நம் நல்வாழ்விற்கென சித்த புருஷர்கள்
அருளியுள்ளனர். அவற்றில் ஒன்று “காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில்
கடுக்காய்” இவை மூன்றையும் முறைப்படி உண்ணுவதே!
காலையில் இஞ்சி: காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை
ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் காய்ச்ச வேண்டும். நீர் அரை டம்ளராக சுண்டிய
பின், அதை வடிகட்டிப் பருக வேண்டும்.
மதியம் சுக்கு: சுக்கை சுண்ணாம்பு தடவி வெய்யிலில்
நன்றாக காய வைத்து மேல் தோலைச் சீவியபின் அதைப் பொடியாக இடித்து வைத்துக்
கொள்ளவேண்டும். அப்பொடியில் 1/4 அல்லது 1/2 டீஸ்பூன் மதியம் சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து ஒன்று
அல்லது இரண்டு உருண்டைகள் உண்ண வேண்டும். பின்னர், எப்பொழுதும் போல் உணவு
உண்ணலாம்.
மாலையில் கடுக்காய்: கடுக்காயை நன்கு வெய்யிலில் காய வைத்து கொட்டையை (விதை) நீக்கி மேல் சக்கையைப் பொடியாக இடித்து
வைத்துக் கொள்ளவேண்டும். அப்பொடியை வெய்யில் காலத்தில் மோரிலும் குளிர் காலத்தில் தேனிலும் கலந்து மாலை
நேரத்தில் உண்ண வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்குறித்த
முறையில் செய்து வந்தால் அவர்களை எந்த நோயும் அணுகாது. மிகமிக அற்புதமான காயகல்ப
மருந்து இதுவாகும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
No comments:
Post a Comment