Thursday, 13 November 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 1,3,5,7,9,11 பாவங்கள் அகம் சார்ந்த விசயங்களை ஆராய்வதற்கும் 2,4,6,8,10,12 பாவங்கள் புறம் சார்ந்த (பொருளாதார) விசயங்களை ஆராய்வதற்கும் பயன் படுத்துகிறோம் என்று முந்தய பதிவுகளில் பார்த்தோம்.

சார ஜோதிட விதிப்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின் 9ம் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்தினை எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் ஜாதகர் அனுபவிப்பதை குறிக்கும். எனவே 2ம் பாவத்திற்கு 9ம் பாவமான 10ம் பாவத்தினை தொடர்பு கொள்வது 2ம் பாவத்திற்கு சிறப்பான அமைப்பினை தரும் எனலாம்.

ஒருவருக்கு நன்றாக தொழில் அமைந்தாலே அவருக்கு பொருளாதரத்தில் எந்த வித பிரச்சினைகளும் வராது. எனவே ஒருவருக்கு 10ம் பாவம் வலுவாக இருந்து 2ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவர் செய்யும் தொழில் மூலம் வருமானம் வரும்.

ஒருவருக்கு தனம் பல வழிகளில் வந்தாலும் அவருக்கு தொழில் மூலம்
வரும் வருமானமே சிறப்பினை,மதிப்பினை தரும். கர்ம திரிகோனங்கள் என்பவை 2,6,10ம் பாவங்கள் ஆகும். இதில் 10ம் பாவமே வலிமையானது ஆகும். இந்த 10ம் பாவத்தினை கெடுக்கக் கூடியவை 5,9ம் பாவங்கள் ஆகும்.

ஒருவர் தொடர்ந்து கேளிக்கை மற்றும் சிற்றின்ப போகங்களிலேயே திளைத்து இருந்தால் அவரால் தன்னுடைய தொழிலை சரியாக கவனிக்க முடியாது.

இனிவரும் பதிவுகளில் 10ம் பாவத்தின் காரகத்துவங்கள் மற்றும் 1 முதல் 12 பாவங்களும் 10 பாவத்துடன் தொடர்பு கொள்வதால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

No comments:

Post a Comment