Tuesday, 25 November 2014

ஆன்மீகத்தில் கிழக்குத் திசை – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

கிழக்குத் திக்கில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

1.       நாம் அமருகின்ற இருக்கைகளை கிழக்கு திசை பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.       மஞ்சள் நிறம் உடைய அனைத்துப் பொருட்களையும் கிழக்குத் திக்கில் தான் வைக்க வேண்டும். உதாரணமாக, தங்க நகைகள், மாங்கல்ய  சரடு, மஞ்சள் மற்றும் மஞ்சள் வஸ்திரம் போன்றவை.
3.       இவை தவிர கண்ணாடி, பேனா,பென்சில் போன்றவைகளையும் கிழக்குத் திக்கில் தான் வைக்க வேண்டும்.
4.       நகைகளை அணியும் பொழுது கிழக்குத் திக்கு பார்த்து நின்றுகொண்டு தான் அணிய வேண்டும்.
5.       அனைத்துவிதமான ஒப்பந்தங்களில் கையொப்பம் இடும் பொழுதும் கிழக்குத் திக்கு பார்த்து நின்று தான் இட வேண்டும்.
6.       அலுவலகத்தில் வருகைப் பதிவில் கையொப்பம் இடும் பொழுதும் அதனை கிழக்குத் திக்கில் வைத்து தான் இட வேண்டும். இதன் மூலம் அலுவலகத்தில் தேவை இல்லாமல் வரும் பிரச்சினைகள் வராது.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

No comments:

Post a Comment