Tuesday, 25 November 2014

ஆன்மீகத்தில் கிழக்குத் திசை – பாகம் 2


வணக்கம் நண்பர்களே!

கிழக்குத் திக்கில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

1.       கிழக்குத் திக்கில் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் மதியம் 12 மணிக்குள் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்
2.       ஆடைகள் அணியும் பொழுதும், பட்டன் போடும் பொழுதும் கிழக்கு திக்கு பார்த்து அணிய வேண்டும்
3.       முடிச்சு போடும் எந்த ஒரு காரியத்தையும் கிழக்கு திக்கை பார்த்தே செய்ய வேண்டும்.
4.       நோய்களுக்கான மருந்துகளைச் சாப்பிடும் பொழுது செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடுவதே சிறப்பு. அவ்வாறு சாப்பிடும் பொழுது கிழக்குத் திக்கு பார்த்து தான் சாப்பிட வேண்டும்.
5.       ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் கிழக்கு நோக்கி நின்று எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது.
6.       இவ்வாறு கிழக்குத் திக்கில் நாம் செய்கின்ற காரியங்கள் அனைத்திற்கும் உண்மை பேசும் பாலகராய் இருந்கின்ற பவன் ஆசி  அளிக்கின்றார்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

No comments:

Post a Comment