வணக்கம் நண்பர்களே!
இந்த பதிவில் 10ம் பாவத்தின் பொதுவான காரகத்துவங்களைப் பார்ப்போம். சார
ஜோதிட முறையில் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தில் 10ம் பாவ ஆரம்பமுனையைக் கொண்டு
ஜாதகரின் தொழிலுக்கான கொடுப்பினையை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த தொழிலின் மூலம் மதிப்பு, அதிகாரம், உயர் பதவி, பதவி உயர்வு,
பொறுப்பான பதவி, தலைமை பதவி, கெளரவம் மற்றும் மரியாதை ஜாதகருக்கு கிடைக்குமா
என்பதை காட்டுவது 10ம் பாவம் ஆகும்.
மேலும் புறம் சார்ந்த அனைத்து காரியங்களிலும் வெற்றி, நிர்வாகத் திறன்
தொழில் சாதனையாளர்கள், குழுவிற்கு தலைமை தாங்குதல், சாதனை புரிதல் மற்றும் எளிதில்
திருப்தி அடையாத குணம் போன்ற காரங்கன்களை 10ம் பாவம் கொண்டுள்ளது.
இந்த 10ம் பாவம் உலகத்தில் உள்ள அனைத்து தொழில்களையும், ஜாதகரின்
முதல் தொழிலையும் தெரிவிப்பது ஆகும். மேலும் வைத்தியர், கட்டளை இடுபவர்கள்,
நீதிபதி, அரசாங்கம் ,தொடைப்பகுதி, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்தல் போன்ற காரகங்களை கொண்டுள்ளது.
10ம் பாவம் தனக்கு கொடுக்கப்பட்ட செயலை கவனமுடன், பொறுப்புடன்,
அக்கறையுடன் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வினை 10ம் பாவம் குறிக்கும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment