வணக்கம் நண்பர்களே!
லக்ன பாவம் என்பது ஜாதகத்தின் ஆரம்ப புள்ளி ஆகும். ஒருவருடைய
தனித்தன்மையை லக்னபாவத்தின் தொடர்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். மேலும்
தலைப்பகுதியை குறிப்பது லக்னபாவம்.
லக்ன பாவத்தைமையமாக கொண்டே அனைத்து பாவங்களும் இயங்குகின்றன. மேலும்
அனைத்து பாவங்களும் லக்னபாவத்தின் காரகங்களை தன்னகத்தே வைத்து உள்ளன. அதே போல
லக்னமும் மற்ற 11 பாவங்களின் காரகங்களை கொண்டுள்ளது.
ஒருவரின் ஜாதகத்தில் அனைத்து பாவங்களும் நன்றாக இருந்து லக்னம்
சரியில்லை என்றால் மற்ற 11 பாவங்களின் காரகங்களை ஜாதகரால் நன்றாக அனுபவிக்க
முடியாது.
லக்னபாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரத்தின் மூலம் ஜாதகருக்கு
கிடைக்க கூடிய சாதக பாதகங்களை காட்டும். லக்ன புத்தி நாதனாக எந்த கிரகம் அமைகிறதோ
அந்த கிரகத்தின் காரகத்தின் படியே ஒருவருடைய தோற்றம்,குணம்
அமையும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
No comments:
Post a Comment