Friday, 21 November 2014

எம பயம் நீங்க...


வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு மாதமும் வரும் மக நட்சத்திரத்தன்று  எருமை மாடுகளுக்கு உணவு படைப்பது மிகவும் விசேசம். அதிலும் குறிப்பாக அகஸ்திய முனிவரிடம் ஆசி பெற்ற அகத்திக் கீரையை மக நட்சத்திரத்தன்று  எம தர்மராஜரின் வாகனமான எருமை மாடுகளுக்குக் கொடுத்து முறையாக வணங்கி வந்தால் எம(மரண) பயம் நீங்கும். இறந்தவுடன் ஜோதியாக சிவலோகம் அடையும் நல்வழி கிட்டும்.

வளர்பிறை நாட்களில் வரும் மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்கு கீழ்க்கண்ட முறையில் உணவிடுவதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஞாயிறு – பரங்கி பத்தை
திங்கள் – முளைக் கீரை
செவ்வாய் – சிவப்புத் தண்டுக் கீரை
புதன் – முருங்கைக் கீரை
வியாழன் – பொன்னாங்கண்ணிக் கீரை
வெள்ளி – பசலைக் கீரை
சனி – நச்சுக் கோட்டை கீரை

நன்றி நண்பர்களே!
Su. Suresh  

No comments:

Post a Comment