Saturday, 11 January 2014

ஜோதிட அனுபவங்கள் - 1

இங்கு நான்   திரு.தேவராஜ்,சென்னை அவர்களிடம்  நான் கற்றவற்றில் இருந்து ஜோதிட ஆர்வம் உள்ள ஒவ்வொறுவரும் படித்து பயன் படகூடிய  வகையில் என்னுடைய அனுபவங்களை சொல்ல போகிறேன். 

நான் ஜோதிடம் கற்பதற்கு முன்பு எல்லோரையும் போல் நானும் ஜோதிடர்களை சந்தித்து பலன்கள் கேட்டு இருக்கிறேன். எப்பொழுது கேட்டாலும் ஆறு மாதம் அல்லது ஒருவருடம் சென்ற பின்புதான் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். கூடவே பரிகாரமும் கிடைக்கும். இதில் என்னால் ஏற்றுகொள்ள முடியாத விஷயமாக இருந்தது அதே ஜோதிடரை அடுத்ததடவை அணுகினால் மறுபடியும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துதான் நன்றாக இருக்கும் என்று கூறுவார். அத்துடன் சென்ற முறை சொன்ன பலன்களையும் மாற்றி இருப்பார்.

இது எனக்கு மட்டும் அல்ல. உங்களுக்கும் கூட இவ்வாறான அனுபவம் கிடைத்து இருக்கும். ஏன் ஒரு ஜோதிடரால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக பலன்கள் சொல்ல முடிவதில்லை. நீங்கள் மூன்று ஜோதிடரை சந்தித்தால் கண்டிப்பாக மூன்று வேறு விதமான பலன்களை கேட்கவேண்டி இருக்கும். இது கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம், 

இது அவர்களுடைய தவறு அல்ல. அவர் படித்ததை வைத்து அவரின் பலன் கூறும் தன்மை அமைந்துள்ளது. அதனால் எல்லோரும் ஒரே மாதிரியான பலன்களை சொல்ல கூடிய முறை என்ன என்று தேடினேன். எனக்கு சார ஜோதிடம் என்ற முறை எனக்கு உதவியது.

மேலும் அனுபவங்கள் தொடரும்.

என்றும் அன்புடன்
SU.Suresh

No comments:

Post a Comment