நவக்கிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும்
தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால் நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால்
இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்க்குக்
காரணம் சனி பகவானைப் பற்றிய தெயவீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே
ஆகும்.
வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது.
ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.
என்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற
காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லகூடிய சனீஸ்வர
பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக
செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.
தொடரும் ----
ASTRO SU SURESH
99946 90117
No comments:
Post a Comment