Friday, 22 August 2014

ஜோதிட பலன்கள்



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் உங்களுடைய ஜாதகத்தை கணித்து கீழ்க்கண்ட பலன்களை தெரிந்து கொள்ள  வேண்டுமா?

1.       ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2.       ஜாதகரின் என்ன அலைகள் எதன் ரீதியில் இருக்கும்?
3.       ஜாதகர் கவுரவமான நிலையில் இருப்பரா?
4.       ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா?
5.       ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
6.       ஜாதகருக்கு கண் நோய் உண்டா?
7.       ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா?
8.       ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா?
9.       ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
10.   ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது?
11.   எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
12.   நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
13.   ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா?
14.   ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது?
15.   ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா?
16.   ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா?
17.   ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்போது கடன் அடைக்க முடியும்?
18.   ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்?
19.   ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது?
20.   ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா?
21.   ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா?

தொடர்பு கொள்ளுங்கள்

Su.சுரேஷ்
9994690117

9952127002

Saturday, 16 August 2014

ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்பொழுது கடனை அடைக்க முடியும்?



வணக்கம் நண்பர்களே!

கடன் வாங்குவது கௌரவ குறைவு என்ற காலம் போய், இன்று கடன் இல்லாதவர்களை பார்பதே அரிதான காரியம் ஆகிவிட்டது. அன்று அவசர தேவைகளுக்கு கடன் வேண்டும் என்றால் நண்பர்களிடமோ, தங்களிடம் உள்ள பொருட்களை அடமானம் வைத்தோ கடன் பெறலாம். ஆனால் இன்றோ கிரெடிட் கார்ட்டின் மூலமாக தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம். எந்த ஒரு பொருளையும் இந்த மாதம் வங்கி அடுத்த மாதம் பணம் கட்டிவிடலாம் என்ற நிலை உள்ளது.

கடன் கட்ட முடியாமல் கந்து வட்டி காரர்களுக்கு பயந்த காலம் போய்
கிரெடிட் கார்ட் மூலம் ஏற்ப்பட்ட கடனை அடைக்க முடியாமல் தன்னுடைய அடையாளம் மற்றும் முகவரியை மாற்றி கொண்டு வாழும் பலர் உள்ளனர் இன்று.

பொதுவாக ஒருவருக்கு கடன் வாங்கும் யோகத்தையும், அதனால் ஏற்ப்படும் பிரச்சினைகளையும் 6ம் பாவம் கொண்டு அறியலாம். 6ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சதிரத்தின் மூலம் லக்னத்திற்கு 8 மற்றும் 12 பாவங்களை தொடர்பு கொண்டால் கடன் மூலம் பல பிரச்சினைகள் ஜாதகருக்கு வரும். 8 மற்றும் 12ம் பாவங்கள் 6ம் பாவத்திற்கு சாதகமான பாவங்கள். இந்த தொடர்பு 6ம் பாவத்தை வளர்க்கவே செய்யும்.

6ம் பாவம், தன் பாவத்திற்கு 8 மற்றும் 12ம் பாவங்களாகிய 1,5 பாவ தொடர்பினை பெற்று இருந்தால் ஜாதகரால் கடன் வங்க முடியாது. அப்படியே வாங்கினாலும் உடனேயே அடைத்து விடுவார். அவர் வாங்கிய கடன்களால் எந்தவிதமான பிரச்சினைகளும் ஜாதகருக்கு ஏற்ப்படாது.  
மேலும் 1,5 பாவ தொடர்பினை பெற்று இருக்கும் கிரகங்களின் தசா புத்தி காலங்களில் அந்த கடனை ஒரு அளவிற்கு அடைத்து விட முடியும்.

பொதுவாக லக்ன பாவத்திற்கு பாதகமான மற்றும் 6ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களாகிய 4,8,12 தொடர்புடைய தசா புத்திகளின் கால கட்டங்களில் தற்காலிகமாக ஜாதகர் கடன் வங்க கூடிய சூழ்நிலை ஏற்ப்படும். அதனை அடைக்க முடியுமா அல்லது அதனால் பிரச்சினைகள் உண்டா என்பதை 6ம் பாவ தொடர்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.     
  
நன்றி நண்பர்களே

SU.Suresh
astrovaasan@gmail.com

Tuesday, 12 August 2014

ஜாதகருக்கு காதலில் வெற்றியா, தோல்வியா. அசிங்க அவமானங்களா?


வணக்கம் நண்பர்களே!

ஒருவருடைய 5ம் பாவம் அவரை காதலிக்கும் நபரை குறிக்க கூடியது. காதலினால் ஏற்ப்படும் விளைவுகளை 5ம் பாவம் கொண்டு அறியலாம். ஜாதகர் காதலிக்கும் நபரை கைபிடிப்பரா அல்லது பிரிவுகள் ஏற்படுமா அல்லது காதலிக்கும் நபரால் ஜாதகருக்கு பிரச்சினைகள் ஏர்ப்படுமா என்பதனை 5 மற்றும் 11ம் பாவங்களை கொண்டு  கண்டறியலாம்.

5ம் பாவ உப நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் தன்(5ம்) பாவத்திற்கு 8,12ம் பாவங்களான 4,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலில் தோல்வி ஏற்ப்படும்.

அல்லது

5ம் பாவ உப நட்சத்திர அதிபதி லக்னத்திற்கு பாதகமான பாவங்களாகிய 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் தான் காதலினால் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும். அசிங்கங்கள் மற்றும் கௌரவ குறைவு  வரும்.

மேலும் ஜாதகரின் 7ம் பாவம் அவரை தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களை குறிக்கும். 7ம் பாவத்திற்கு 5ம் பாவம் அவர்களின் காதலர்களை குறிக்கும். 11ம் பாவமானது 7ம் பாவத்திற்கு 5ம் பாவமாக வரும். இந்த 11ம் பாவம் தன பாவத்திற்கு 8,12ம் பாவங்களாகிய 6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் இந்த ஜாதகரால் பிரச்சினைகளை சந்திப்பார்.

மேலும் 11ம் பாவம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு தான் காதலிக்கும் நபரால்  மனதளவில் கடுமையான பிரச்சினைகள் ஏற்ப்படும். 5ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்புகொண்ட ஜாதகரின் மனம் அனைவரையும் காதலிக்கும் குணம் உடையது.

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 4,10 பாவங்களை தொடர்பு கொண்டால் காதலில் தோல்வி ஏற்ப்படும் அல்லது காதல் திருமணம் முறிவு ஏற்ப்படும்.

பிரச்சினைகள் இல்லாமல் காதல் திருமணத்தில் முடிய 5ம் பாவம் 7 மற்றும் 11ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.

5ம் பாவம் 9 மற்றும் 11 அல்லது 9 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் தவறான காதல் உறவுகள் ஏற்ப்படும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com














Thursday, 7 August 2014

ஜாதகருக்கு நண்பர்களால் தொல்லை உண்டா?



வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருப்பது நட்பு. அத்தகைய நட்பினால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. சார ஜோதிட முறையில் ஜாதகருக்கு நண்பர்களால் தொல்லை மற்றும் அசிங்க அவமானங்கள் ஏற்படுமா என்பதனை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஜாதகத்தில் 11ம் பாவம் என்பது நண்பர்களையும், ஜாதகரின் நலனில் அக்கறை உள்ளவர்களையும் காட்டும். அதாவது 11ம் பாவம் ஜாதகரிடம் நெருக்கமாக மற்றும் சுக துக்கங்களில் பங்கு எடுப்பவர்களையும் குறிக்கும்.

8 மற்றும் 12ம் பாவங்கள் ஜாதகருக்கு அதிகமான தீமை தரக்கூடியவைகள். அதாவது வலி வேதனைகள் மற்றும் அசிங்க அவமானங்கள் அதிகமாக கொடுக்க கூடிய தொடர்பு ஆகும்.

எனவே 11ம் பாவம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் நண்பர்கள் மூலம் அதிகமான பிரச்சினைகளையும் அசிங்கங்களையும் அனுபவிப்பார். குறிப்பாக 11ம் பாவ உப நட்சத்திர அதிபதி யாரோ அதன் காரகங்களை உடையவர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

உதாரணமாக கீழ்க்கண்ட கிரகங்கள் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 11ம் பாவ உப நட்சத்திர அதிபதியாகவும் அமைந்து அந்த காரகத்துவத்தை கொண்ட நண்பர்களை கொண்டு இருந்தால் பிரச்சினைகள் வரும். ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

சூரியன் – அரசாங்க தொடர்பு உடையவர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

சந்திரன் – நிதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் விதவை பெண்கள் மூலம் பிரச்சினைகள் வரும்

செவ்வாய் – கட்டுமஸ்தான உடலை உடையவர்கள் மூலமும், வங்கி அதிகாரிகள், கொலை கொள்ளை செய்பவர்கள் மூலமும் பிரச்சினைகள் வரும்.

ராகு – மது,மாது மற்றும் வெளிநாட்டு தொடர்பு அதிகம் உடையவர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

குரு – ஆன்மீக வாதிகள் மற்றும் பெரிய மனித தன்மையுடைய நபர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

சனி – கூலி வேலை,எடுபிடி வேலை செய்பவர்கள் மற்றும் சந்தேக குணம் கொண்ட நண்பர்களால் பிச்சினைகள் வரும்.

புதன் – எழுத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஜோதிடம் சார்ந்த நபர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

கேது -  சூது நிறைந்த நண்பர்கள்,கிரிமினல் தொழில் செய்பவர்கள், சட்டவிரோத தொழில் செய்யும் நண்பர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

சுக்கிரன் – பெண்கள்,கலைத் துறை மற்றும் பணக்கார நண்பர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.

பொதுவாக ஜாதகர் ஒற்றைப்படை பாவங்களை தொடர்புகொண்ட கிரகங்களின் காரகங்களை கொண்ட நபர்களை நண்பர்களாக்கி கொண்டால் எந்த விதமான பிரச்சினைகளும் வராது.

நன்றி நண்பர்களே
SU.Suresh

Sunday, 3 August 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 4

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்ளுவது ஷேர் டிரேடிங் செய்வதற்கு சிறப்பான தொடர்பு என்றும் ஷேர் மார்க்கெட் தொழிலின் மூலம் ஜாதகரின் தன நிலை உயரும் என்று பாத்தோம். 

இந்த பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 3ம் பாவத்தை தொடர்பு கொள்ளும்பொழுது உண்டாகும் விளைவுகளை பார்ப்போம். ஜாதகரின் 5ம் பாவம் 3ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகருக்கு ஒரு அளவிற்கு வருமானத்தையும் திருப்தியையும் தரக்கூடிய ஒரு அமைப்பை தரும்.

5ம் பாவத்தின் 3ம் பாவ தொடர்பு ஜாதகருக்கு ஷேர் மார்க்கெட் பற்றிய நூல்களை எழுதகூடிய அமைப்பை தரும். ஜாதகருக்கு குருவும்,புதனும் சாதகமாக இருந்தால் நூல்களை எழுதுவதன் மூலம் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார். ஷேர் மார்க்கெட் பற்றிய விசயங்களை எழுதுவதன் மூலமும், ஷேர் புரோக்கர் தொழில் செய்வதன் மூலமும் வருமானத்தை பெறுவார் ஜாதகர்.

மேலும் ஜாதகர் ஷேர் மார்க்கெட் பற்றிய வகுப்புகளை எடுப்பதற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வரக்கூடிய அமைப்பை பெற்று இருப்பார். அதிகமான விளம்பர பிரியராக இருப்பார். தன்னுடைய வகுப்புகள் பற்றிய  செய்திகளையும், பரிந்துரைகளின் வெற்றி பற்றியும் அதிகமான விளம்பரங்களை செய்து அதன் மூலம் லாபம் அடைவார்.

ஜாதகருக்கு சந்தரன் 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் உற்சாகம் மூட்டக்கூடிய வகையில் தன்னுடன் தொடர்பு கொள்ளுபவர்களுடன் பேசி ஷேர் மார்க்கெட்டுக்கு அவர்களை கொண்டு வந்து விடுவார்.

செவ்வாய் 3ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் தைரியம் அதிகமாகவும், போலியான ஆவணங்கள் மூலம் மற்றவரை ஏமாற்ற கூடிய உள்ள நபராகவும் இருபார்.

இராகு 3ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் சட்டதிற்கு புறம்பான வகையில் அந்நிய நபர்களுடன் தொடர்பு கொண்டு ஷேர்மார்க்கெட்டின் போக்கினை அறிந்து கொண்டு லாபம் அடைவார்.
சனி 3ம் தொடர்பு கொண்ட நபர் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடும்பொழுது அடிக்கடி தான் கொண்ட முடிவை மாற்றி கொள்ளுபவராக இருப்பார். இவருக்கு நிலையான ஒரு முடிவு எடுக்க தெரியாது. பயந்த மனநிலை உடையவர். சிறிய லாபம் வந்தாலும் அல்லது சிறிய நஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு பயத்தினால் வெளியேறி விடுவார். உறுதியான வணிகமே இவரிடம் பார்க்க முடியாது.

கேது 3ம் பாவ தொடர்பு கொண்ட நபர் அடுத்தவரின் கணக்கில் டிரேட் செய்து நஷ்டம் அடைந்து மாட்டி கொள்ளுவார். இதன் மூலம் கிரிமினல் வழக்குகளில் சிக்கி கொள்ளுவார். போலியான செக் கொடுப்பது, போலியான ஆவாணங்கள் தயாரிப்பது ஜாதகருக்கு கைவந்த கலையாக இருக்கும்.

சுக்கிரன் 3ம் பாவ தொடர்பு கொண்ட நபர் சந்தோசமான முறையில் புரோக்கர் ஆபீஸ் நடத்துவார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் சந்தோசமாக இருக்கும்படி தன்னுடைய நிறுவனத்தை அமைத்து இருப்பார். ஜாதகர் பெண்கள் தொடர்பு கொண்டவராகவும், தன்னுடைய நிறுவனத்தில்  பெண்களை அதிகமாக வேலைக்கு அமர்த்தியும் இருப்பார்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com