வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருப்பது நட்பு. அத்தகைய
நட்பினால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. சார ஜோதிட முறையில் ஜாதகருக்கு
நண்பர்களால் தொல்லை மற்றும் அசிங்க அவமானங்கள் ஏற்படுமா என்பதனை எளிதாக
கண்டுபிடிக்கலாம்.
ஜாதகத்தில் 11ம் பாவம் என்பது நண்பர்களையும், ஜாதகரின் நலனில் அக்கறை
உள்ளவர்களையும் காட்டும். அதாவது 11ம் பாவம் ஜாதகரிடம் நெருக்கமாக மற்றும் சுக
துக்கங்களில் பங்கு எடுப்பவர்களையும் குறிக்கும்.
8 மற்றும் 12ம் பாவங்கள் ஜாதகருக்கு அதிகமான தீமை தரக்கூடியவைகள். அதாவது வலி
வேதனைகள் மற்றும் அசிங்க அவமானங்கள் அதிகமாக கொடுக்க கூடிய தொடர்பு ஆகும்.
எனவே 11ம் பாவம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் நண்பர்கள் மூலம் அதிகமான
பிரச்சினைகளையும் அசிங்கங்களையும் அனுபவிப்பார். குறிப்பாக 11ம் பாவ உப நட்சத்திர அதிபதி
யாரோ அதன் காரகங்களை உடையவர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.
உதாரணமாக கீழ்க்கண்ட கிரகங்கள் 8 மற்றும் 12ம்
பாவங்களை தொடர்பு கொண்டு 11ம் பாவ உப நட்சத்திர அதிபதியாகவும் அமைந்து அந்த
காரகத்துவத்தை கொண்ட நண்பர்களை கொண்டு இருந்தால் பிரச்சினைகள் வரும். ஒரு சில உதாரணங்களை
பார்ப்போம்.
சூரியன் – அரசாங்க தொடர்பு உடையவர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில்
உள்ளவர்கள் மூலம் பிரச்சினைகள் வரும்.
சந்திரன் – நிதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கூலி வேலை
செய்பவர்கள் மற்றும் விதவை பெண்கள் மூலம் பிரச்சினைகள் வரும்
செவ்வாய் – கட்டுமஸ்தான உடலை உடையவர்கள் மூலமும், வங்கி அதிகாரிகள்,
கொலை கொள்ளை செய்பவர்கள் மூலமும் பிரச்சினைகள் வரும்.
ராகு – மது,மாது மற்றும் வெளிநாட்டு தொடர்பு அதிகம் உடையவர்கள் மூலம்
பிரச்சினைகள் வரும்.
குரு – ஆன்மீக வாதிகள் மற்றும் பெரிய மனித தன்மையுடைய நபர்கள் மூலம்
பிரச்சினைகள் வரும்.
சனி – கூலி வேலை,எடுபிடி வேலை செய்பவர்கள் மற்றும் சந்தேக குணம் கொண்ட
நண்பர்களால் பிச்சினைகள் வரும்.
புதன் – எழுத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஜோதிடம் சார்ந்த நபர்கள்
மூலம் பிரச்சினைகள் வரும்.
கேது - சூது நிறைந்த
நண்பர்கள்,கிரிமினல் தொழில் செய்பவர்கள், சட்டவிரோத தொழில் செய்யும் நண்பர்கள்
மூலம் பிரச்சினைகள் வரும்.
சுக்கிரன் – பெண்கள்,கலைத் துறை மற்றும் பணக்கார நண்பர்கள் மூலம்
பிரச்சினைகள் வரும்.
பொதுவாக ஜாதகர் ஒற்றைப்படை பாவங்களை தொடர்புகொண்ட கிரகங்களின்
காரகங்களை கொண்ட நபர்களை நண்பர்களாக்கி கொண்டால் எந்த விதமான பிரச்சினைகளும் வராது.
நன்றி நண்பர்களே
SU.Suresh
No comments:
Post a Comment