நாம் எல்லோருக்குமே எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் அது வெற்றியுடனே முடிய வேண்டும் என்று விரும்புகின்றோம். ஒருவேளை அந்த செயல் தோல்வியுடன் முடிந்தால் நம்மால் அந்தனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏன் இந்த தோல்வி? எளிதாக முடிக்க கூடிய கரியங்கள் கூட எதோ ஒரு காரணத்தால் முடியாமல் போய் விடுகின்றன. . உதரணத்திற்கு ஒரு தேவைக்காக ரூ 50000 தேவை என்று வைத்துக்கொள்ளுங்கள். இதனை பெருவதற்கான செயலில் இறங்கும் போது நமக்கு தெரிந்தவர்களிடம் அல்லது தெரிந்தவரிடம் கேட்போம். தருகின்றேன் என்று கூறுவார்கள் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும்.
சில நேரத்தில் நகையை அடகு வைக்க கூட முடியாமல் போய்விடும் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளால். இதற்கு காரணம் அந்த செயலை ஆரம்பித்த நேரம் தான். நம்மை ஆட்டுவிப்பது இந்த பிரபஞ்சத்தில் உள்ள காரணிகள்தான். என்பதனை புரிந்து கொண்டால் இயற்கையை நன்றாக அனுபவிக்க முடியும்.
எந்த ஒரு செயலின் முடிவும் ஆரம்பமும் வீட்டு ஒரு செயலின் ஆரம்பம். இது தான் இயற்கை. சரி எடுத்த நியாயமான செயல்களில் அல்லது ஆசைகளில் வெற்றி பெறுவது எப்படி? முடிந்த மட்டும் ஒரு செயலை தொடங்கும் பொழுது சரியான நேரத்தை கண்டுபிடித்து ஆரம்பித்தால் வெற்றியை பிடிப்பது என்பது எளிது. ஒவோருவருடைய ஜாதகத்திலும் வெற்றியை தரக்கூடிய கிரகம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
அதனை கண்டு பிடித்து தினமும் வரும் ஒரையுடன் பயைன்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாலும் கண்டிப்பாக வெற்றியை தரக்கூடிய ஓரை என்று உண்டு. அவற்றை உங்களின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு கால நிலைகளுக்கு ஏற்ப பயன்படுதினால் வெற்றி உங்கள் கையில்.
வெற்றியுடன் இந்த நாளை முடிக்க வாழ்த்துக்கள்.
தொடர்புக்கு : astrovaasan@gmail.com
நன்றி
SU.Suresh
No comments:
Post a Comment