Friday, 4 April 2014

நன்றாக சம்பாதிக்க முடியுமா? - ஜாதகத்தில் வழி உண்டா?






அவசர உலகில் கை நிறைய சம்பாதித்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். நடப்பதோ பணம் இருபவரிடம் மட்டுமே பணம் சேருகிறது. ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் வேகமாக முன்னேறுகின்றனர்.

கடுமையாக உழைத்தும் கூட என்னால் முன்னேற முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் அதிகம். நமக்கு அதிஷ்டம் இல்லை என்று நொந்து கொண்டு இருந்து விடுகிறோம். அனால் ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்கும் வழி ஓன்று கண்டிப்பாக இருக்கும். அதனை உங்களுடைய ஜாதகத்தின் மூலமாக கண்டு பிடிக்கலாம்.

அந்த வழியில் நம்பிக்கையுடன் சென்றால்  கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கை,விடா முயற்சி மற்றும் சரியான வழி. இந்த சரியான வழி எது என்பதனை நம்முடைய ஜாதகம் காட்டும். நடப்பு தச புத்தி என்ன தரும் என்பதனை அறிந்து அதனை மட்டும் நேர்மையுடன் நம்பிக்கையுடன் செய்தால் போதும், வெற்றி நமதே.

மேலும் அந்த செயல்களை சரியான நேரம் பார்த்து நம்முடைய குல தெய்வத்தை வேண்டி ஆரம்பித்தால் போதும். அது வெற்றியுடன் தான் முடியும்.

சார ஜோதிட முறையில் செல்வ வளத்திற்கு குரு மற்றும் சுக்கிரன் காரகம் வகிக்கின்றனர். குருவை விட அதிக பலனை கொடுப்பவர் சுக்கிரன். அதனை அனுபவிப்பதற்கும் அவரே வழி வகுப்பவர். மேலும் பணத்தை கொடுத்துவிட்டு உடல் சுகத்தை எடுப்பதில் சுக்கிரனின் பங்கு அதிகம்.

சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் கெட்டால் பெண்,சுகர் மற்றும் அடம்பர வாழ்க்கை போன்றவற்றில் பிரச்சினைகள் வரும். இது தசா புத்தியை சார்ந்தது. அவை நன்றாக இருந்தால் தப்பிக்கலாம். எல்லோரும் பயப்பட வேண்டியது இல்லை.

ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் 2 பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் (அதாவது 2,4,6,10 என்ற பாவங்களுடன்) எளிதான முறையில் சம்பாதித்து சொத்து சேர்க்க முடியும். மேலும் ஒருவருடைய 12 பாவங்களையும் ஆராய்ந்து எந்த வழியில் நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பாவமும் ஒருவருக்கு எந்த முறையில் சுகத்தை, சிரமத்தை கொடுக்க போகின்றது என்பதனை ஒவ்வொன்றாக எழுதுகின்றேன்.

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

நன்றி

சு. சுரேஷ்
http://jothidaanubavam.blogspot.in
astrovaasan@gmail.com













No comments:

Post a Comment