குல தெய்வம் என்பது நமது பரம்பரையில் வழி வழியாக நமது முன்னோர்கள் வழிபட்டு வந்த தெய்வம் தெய்வம் ஆகும். ஒருவருக்கு கெடுதல் நடைபெறுகிறது என்றால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றே கூறலாம். என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது குல தெய்வ வழிபாடு செய்கின்றீர்களா? என்றுதான்.
முதலில் அதனை சரி செய்தால் போதும். நல்லவைகள் தானாகவே நடைபெறும். ஏன் என்றால் அந்த தெய்வம் நமது பரம்பரைக்ககவே உள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்கு நல்லதுதான் செய்யும். முடிந்தால் மாதம் ஒருமுறை அல்லது வருடம் ஒருமுறையாவது போய் வழிபட்டு வர வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடும் முறை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதனை உங்களது குடும்பத்தை சேர்ந்த வயதான நபர்களை கேட்டால் கண்டிபாக வழிபட்டு முறை கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் நமக்கு இல்லை என்பதை நாம் எளிதில் கண்டு பிடிக்கலாம். நாம் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்கள் உடையும். பொருள் திருடு போகும். அடிபடும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது.
மேலும் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகும். உதாரணத்திற்க்கு கோவிலுக்கு செல்ல முயலும் போது எல்லாம் ஒரு கேட்ட செய்தி வந்து போக முடியாமல் போகும். ஒருவருக்கு ஜாதகத்தில் 5ம் பாவம்(பூர்வ புண்ணியம்) கெட்டு இருந்தால் இவ்வாறு நடைபெறும். இவர்களுக்கு அனைத்து காரியங்களும் தடங்கல் ஆகும்.
இவர்கள் தங்களது தொந்தத்தில் குல தெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் முதலில் சென்று வரலாம். அதன் பிறகு தனியாக செல்ல முயற்சி செய்யலாம். சிலருக்கு தனது குல தெய்வம் என்பது எது என்பது தெரியாது. அவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வத்தை அல்லது ஒரு பிடித்த அம்மனை எடுத்து கொள்ளலாம். கண்டிப்பாக நல்ல வழி பிறக்கும்.
ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
நன்றி
சு. சுரேஷ்
http://jothidaanubavam.blogspot.in
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment