ஒரு தாய் தகப்பனின் முக்கிய கடமைகளில் ஒன்று தான் ஆசையாக பெற்று வளர்த்த பிள்ளைக்கு ஒரு திருமணத்தை செய்து பார்க்க வேண்டும் என்பதே. இது ஒரு தவிர்க்க முடியாத கடமை. அதிலும் குறிப்பாக இப்போது பெண் கிடைப்பது என்பது மிகப்பெரிய விசயம். மகனின் ஜாதகத்தை எடுத்து கொண்டு எப்போது திருமணம் நடைபெறும் என்று தேடுபவர்கள் அதிகமாக இருகின்றனர்.
பெண் கிடைத்தாலும் ஜாதகம் பொருந்த வேண்டும். ஜாதக பொருத்தம் பார்த்து பார்த்து இன்று பெற்றோரே ஜாதக பொறுத்தம் பார்க்க கற்றுக்கொண்டு விட்டனர். என்னிடம் ஜாதகம் கொடுக்கும் பொழுதே இது எல்லாம் பார்த்து விட்டேன். இருவரும் திருமணதிற்கு பின்பு நன்றாக இருபர்களா என்று பார்த்து சொல்லுங்கள் என்கின்றனர்.
ஒருகாலத்தில் பொருத்தம் மட்டும் பார்த்து செய்து கொண்டு இருந்தனர். தற்போது பரவில்லை. பொருத்தத்தை தாண்டி இருவருக்கும் திருமணம் செய்தால் குழந்தை,சந்தோசம் முதலியவை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என்கின்றனர்.
சார ஜோதிட முறையில் எளிமயான முறையில் பார்க்க முடியும். ஏழாம் பாவ கொடுப்பினை மற்றும் ஆணிற்கு சுக்கிரன், பெண்ணிற்கு செவ்வாயின் கொடுப்பிணை இவற்றை ஆராய்ந்து தற்போது நடை பெரும் புத்தியின் தொடர்பு 5 மற்றும் 9 ஆக இருக்குமானால் திருமணதிற்கு உத்தமமான காலம்.
நடைபெறும் காலத்தை தசா,புத்தி,அந்தரம்,சூர்ச்சமம் என்று பிரித்து உள்ளனர். என்னதான் திருமண தடங்கல் இருந்தலும் பிரார்த்தனை மற்றும் முயற்சி செய்தால் நடைபெறும் காலத்திலேயே திருமணத்தை கொடுப்பதற்கு வழி இருக்கும். எந்த கிரகம் நன்றாக உள்ளது என்று பார்த்து அந்த Vibration னை நம் உடலுக்கு கொண்டுவந்தால் போதும்.
மேலும் சிலர் ஒரு வருடம் இரண்டு வருடம் கழித்து ஜாதகத்தை எடுங்கள் என்பார்கள். மேலும் இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்று கொள்ளுங்கள் என்கிறனர். இது தவறு. இயர்கையை எதிர்பதற்கு நாம் யார்? எது எப்போது கிடைக்கும் என்பதை மட்டும் நம்முடைய ஜாதகத்தை வைத்து பார்க்கலாம். இதை இப்போது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று கூறுவது தவறு என்பது எனது கருத்து.
தொடர்புக்கு: astrovaasn@gmail.com
நன்றி
SU.Suresh
No comments:
Post a Comment