Friday, 24 April 2015

மாங்கல்ய பலம் பெருக


வணக்கம் நண்பர்களே!

பெண்கள் காரடையான் நோன்பு தினத்தன்று கம்பு, கேழ்வரகு, சோளம் இம்மூன்றில் ஏதேனும் ஒரு மாவினால் கார அடை செய்து காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மனின் இருபுறமும் உள்ள மூலஸ்தானத் தூண்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி தேவி, ஸ்ரீஜேஷ்டா தேவி ஆகியோருக்குப் படைத்து, தேங்காய், பழம், தாம்பூலத்துடன் ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாய் அளிக்க வேண்டும். இதனால் செல்வ விருத்தியும், தீர்க்கமான மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.

ஸ்ரீஅருந்ததி தேவி, ஸ்ரீஅனுசுயா தேவி, ஸ்ரீலோபா முத்ரா தேவி ஆகிய மூவரும் சேர்ந்து கடைபிடித்த அற்புதமான பூஜை முறை இது.

ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்தருளியுள்ள தளங்களிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஈரோடு அருகே பவானியில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோவில், திருச்சி உயக்கொண்டான் மலை அருள்மிகு உஜ்ஜீவநாதர், திருஆனைக்கா ஸ்ரீஜம்புகேசுவரர் திருக்கோவில் போன்றவையாகும். 

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99521 27002


Monday, 20 April 2015

முதல் பொருள் யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

சென்னை கேம்ப் ரோடு அருகில் மாடம்பாக்கம் என்னும் அழகிய கிராமத்தில் உள்ள ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேவலோகப் பசுவாம் காமதேனுவின் குழம்பு பதிந்த பசுங்கொம்பு வடிவத்தில் லிங்க
மூர்த்தியாய்க் காட்சி தருகின்றார் சிவபெருமான்.

இங்கு எழுந்தருளியுள்ள நந்தீஸ்வரர் மிகவும் விசேசமானவர் ஆவார். இந்த நந்தீஸ்வர மூர்த்தியே ஆதிசிவனுக்கு முதன் முதலாய் அமைந்த வாகன மூர்த்தி. இதன் காரணமாகவே உலகத்தின் எவ்வித முதல்  பொருளையும் இக்கோயிலில் சமர்பிக்கும் வழக்கம் நிலவி வருகின்றது.

தென்னை மரத்தின் முதல் இளநீர், வயலில் முதல் விளைச்சல், வியாபாரத்தில் முதல் லாபம் போன்ற முதல் பொருட்களை ஸ்ரீதேனுபுரீஸ்வரருக்கு அர்பணித்தல் ஸ்ரீ-ஆதிமூல நந்தீஸ்வரரின் அருளைப் பெற்றுத் தரும்.

இதை அனைவரும் கடைபிடித்து வந்தால் வியாபார விருத்தியும் செல்வச் செழிப்பும் பெற்று வாழலாம்.

      
நன்றி நண்பர்களே!

SU.SURESH

99521 27002

Thursday, 2 April 2015

குழந்தைகள் சரியாக சாப்பிட வில்லையா?


வணக்கம் நண்பர்களே!

மதுரை – திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் கோயிலில் சுற்றிலும் பல தேவி ஸ்வரூபிணி மூர்த்திகள் வீற்றிருக்க நடுவினில் ஸ்ரீஅன்னபூரணி தேவி காட்சி அளிப்பது மிகவும் அபூர்வமான தரிசனம். இந்த தேவிக்கு ஸ்ரீஅமிர்தவர்ஷிணி தேவி என்று பெயர்.

சிறு குழந்தைகளுக்கு முதன் முதலில் உணவு ஊட்டும் போது (அன்னப்ராசனம்) ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் அதனை நிறைவேற்றுவது வழக்கம். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் இங்கு ஸ்ரீஅன்னபூரணி சன்னதியில் அதனைச் செய்தால் குழந்தைகள் எவ்வித உணவு வகைகளையும் வெறுத்து ஒதுக்காமல், நன்றாக உணவு உண்டு நன்கு வளருவர்.

குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானத்துடன் நம் குழந்தைகளுக்கு “முதல் உணவு ஊட்டும் விழா” வைக் கொண்டாடினால், ஸ்ரீஅன்னபூரணி தேவியே உளமகிழ்ந்து முதல் அன்னமாக உள்ளே சென்று அருள்பாலிக்கின்றாள். 


நன்றி நண்பர்களே!


சு.சுரேஷ் ஜோதிடர்
99521 27002