Monday, 20 April 2015

முதல் பொருள் யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

சென்னை கேம்ப் ரோடு அருகில் மாடம்பாக்கம் என்னும் அழகிய கிராமத்தில் உள்ள ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேவலோகப் பசுவாம் காமதேனுவின் குழம்பு பதிந்த பசுங்கொம்பு வடிவத்தில் லிங்க
மூர்த்தியாய்க் காட்சி தருகின்றார் சிவபெருமான்.

இங்கு எழுந்தருளியுள்ள நந்தீஸ்வரர் மிகவும் விசேசமானவர் ஆவார். இந்த நந்தீஸ்வர மூர்த்தியே ஆதிசிவனுக்கு முதன் முதலாய் அமைந்த வாகன மூர்த்தி. இதன் காரணமாகவே உலகத்தின் எவ்வித முதல்  பொருளையும் இக்கோயிலில் சமர்பிக்கும் வழக்கம் நிலவி வருகின்றது.

தென்னை மரத்தின் முதல் இளநீர், வயலில் முதல் விளைச்சல், வியாபாரத்தில் முதல் லாபம் போன்ற முதல் பொருட்களை ஸ்ரீதேனுபுரீஸ்வரருக்கு அர்பணித்தல் ஸ்ரீ-ஆதிமூல நந்தீஸ்வரரின் அருளைப் பெற்றுத் தரும்.

இதை அனைவரும் கடைபிடித்து வந்தால் வியாபார விருத்தியும் செல்வச் செழிப்பும் பெற்று வாழலாம்.

      
நன்றி நண்பர்களே!

SU.SURESH

99521 27002

No comments:

Post a Comment