Friday, 24 April 2015

மாங்கல்ய பலம் பெருக


வணக்கம் நண்பர்களே!

பெண்கள் காரடையான் நோன்பு தினத்தன்று கம்பு, கேழ்வரகு, சோளம் இம்மூன்றில் ஏதேனும் ஒரு மாவினால் கார அடை செய்து காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மனின் இருபுறமும் உள்ள மூலஸ்தானத் தூண்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி தேவி, ஸ்ரீஜேஷ்டா தேவி ஆகியோருக்குப் படைத்து, தேங்காய், பழம், தாம்பூலத்துடன் ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாய் அளிக்க வேண்டும். இதனால் செல்வ விருத்தியும், தீர்க்கமான மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.

ஸ்ரீஅருந்ததி தேவி, ஸ்ரீஅனுசுயா தேவி, ஸ்ரீலோபா முத்ரா தேவி ஆகிய மூவரும் சேர்ந்து கடைபிடித்த அற்புதமான பூஜை முறை இது.

ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்தருளியுள்ள தளங்களிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஈரோடு அருகே பவானியில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோவில், திருச்சி உயக்கொண்டான் மலை அருள்மிகு உஜ்ஜீவநாதர், திருஆனைக்கா ஸ்ரீஜம்புகேசுவரர் திருக்கோவில் போன்றவையாகும். 

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99521 27002


No comments:

Post a Comment