Thursday, 2 April 2015

குழந்தைகள் சரியாக சாப்பிட வில்லையா?


வணக்கம் நண்பர்களே!

மதுரை – திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் கோயிலில் சுற்றிலும் பல தேவி ஸ்வரூபிணி மூர்த்திகள் வீற்றிருக்க நடுவினில் ஸ்ரீஅன்னபூரணி தேவி காட்சி அளிப்பது மிகவும் அபூர்வமான தரிசனம். இந்த தேவிக்கு ஸ்ரீஅமிர்தவர்ஷிணி தேவி என்று பெயர்.

சிறு குழந்தைகளுக்கு முதன் முதலில் உணவு ஊட்டும் போது (அன்னப்ராசனம்) ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் அதனை நிறைவேற்றுவது வழக்கம். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் இங்கு ஸ்ரீஅன்னபூரணி சன்னதியில் அதனைச் செய்தால் குழந்தைகள் எவ்வித உணவு வகைகளையும் வெறுத்து ஒதுக்காமல், நன்றாக உணவு உண்டு நன்கு வளருவர்.

குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானத்துடன் நம் குழந்தைகளுக்கு “முதல் உணவு ஊட்டும் விழா” வைக் கொண்டாடினால், ஸ்ரீஅன்னபூரணி தேவியே உளமகிழ்ந்து முதல் அன்னமாக உள்ளே சென்று அருள்பாலிக்கின்றாள். 


நன்றி நண்பர்களே!


சு.சுரேஷ் ஜோதிடர்
99521 27002

No comments:

Post a Comment