ஓம் ஸ்ரீ குருவே சரணம்
நாம் இரவில் உறங்கும்போது இலவம் பஞ்சு
மெத்தையில் உறங்குவதே சிறப்பாகும். தேக்கு,
மா போன்ற மரக் கட்டில்கள் ஆரோக்கியத்திற்கு
உகந்தவை. முடிந்தவரை ரப்பர், ப்ளாஸ்டிக்,
ரெக்ஸின் போன்ற செயற்கை ரசாயனப் படுக்கைகளையும்
தலையணைகளையும் தவிர்க்கவும். நல்ல காற்றோட்டம் நிறைந்த, சுத்தமான இடத்தில் உறங்குவது அவசியம்.
மேற்கூரை இல்லாத கட்டிடங்களிலோ, அசுத்தமான விடுதிகளிலோ, மொட்டை மாடிகளிலோ உறங்க வேண்டாம். இரவில் தீய
சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மேற்கூரை இல்லாத இடங்களில் உறங்கினால், தீய சக்திகள் எளிதில் நமது சூட்சும தேகத்தை ஆட்கொண்டு பலவிதமான மனக்
குழப்பங்களைத் தோற்றுவிக்கும்.
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
கோவை
99946 90117
No comments:
Post a Comment