Wednesday, 30 April 2014

ஜோதிட ஆலோசனை பெற விருப்பமா?



உங்களுடைய ஜாதகத்தை உயர் கணித சார ஜோதிட முறையில் கணித்து கீழ்க்கண்ட பலன்களை உங்களுக்கு தருகிறேன்.
1. 12 பாவங்களை பற்றிய முழு ஆய்வு
2. இனி வரும் காலத்தில் மகிழ்ச்சியான காலகட்டம் எது?
3. பொருளாதரத்தில் உயர போகும் காலம் எது?
4. ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற முடியுமா?
5. திருமணம் மற்றும் குழந்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
6. வீடு யோகம் உண்ட இல்லையா?
7. வேலையில் உயர்வு எப்போது?
8. இட மற்றம் எப்போது?
9. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் வரும் வெற்றியை மட்டும் தேடி தரும் நேரத்தை குறித்து தருகிறேன்.
10. கடன்கள் அடைக்க ஒவ்வொரு மதத்திலும் சிறந்த நாள் மற்றும் நேரத்தை குறித்து தருகிறேன்.
11. பிரச்சினையான காலத்தை கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறையில் உங்களை தயார் படுத்தி கொள்ளலாம்.
கட்டணம் ஒரு ஜாதகத்திற்கு ரூ 250 மட்டும். ஒருமுறை கட்டிவிட்டால் போதும். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.
தொடர்புக்கு: astrovaasan@gmail.com
நன்றி
ஜோதிஷ ஆதித்யா SU.Suresh

திருமண யோகம் எப்போது? - ஜாதகத்தில் ஒரு ஆய்வு


ஒரு தாய் தகப்பனின் முக்கிய கடமைகளில் ஒன்று தான் ஆசையாக பெற்று வளர்த்த பிள்ளைக்கு ஒரு திருமணத்தை செய்து பார்க்க வேண்டும் என்பதே. இது ஒரு தவிர்க்க முடியாத கடமை. அதிலும் குறிப்பாக இப்போது பெண் கிடைப்பது என்பது மிகப்பெரிய விசயம். மகனின் ஜாதகத்தை எடுத்து கொண்டு எப்போது திருமணம் நடைபெறும் என்று தேடுபவர்கள் அதிகமாக இருகின்றனர்.  

பெண் கிடைத்தாலும் ஜாதகம் பொருந்த வேண்டும். ஜாதக பொருத்தம் பார்த்து பார்த்து இன்று பெற்றோரே ஜாதக பொறுத்தம் பார்க்க கற்றுக்கொண்டு விட்டனர். என்னிடம் ஜாதகம் கொடுக்கும் பொழுதே இது எல்லாம் பார்த்து விட்டேன். இருவரும் திருமணதிற்கு பின்பு நன்றாக இருபர்களா என்று பார்த்து சொல்லுங்கள் என்கின்றனர்.

ஒருகாலத்தில் பொருத்தம் மட்டும் பார்த்து செய்து கொண்டு இருந்தனர். தற்போது பரவில்லை. பொருத்தத்தை தாண்டி இருவருக்கும் திருமணம் செய்தால் குழந்தை,சந்தோசம் முதலியவை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என்கின்றனர். 

சார ஜோதிட முறையில் எளிமயான முறையில் பார்க்க முடியும். ஏழாம் பாவ கொடுப்பினை மற்றும் ஆணிற்கு சுக்கிரன், பெண்ணிற்கு செவ்வாயின் கொடுப்பிணை இவற்றை  ஆராய்ந்து தற்போது நடை பெரும் புத்தியின் தொடர்பு 5 மற்றும் 9 ஆக இருக்குமானால் திருமணதிற்கு உத்தமமான காலம்.

நடைபெறும் காலத்தை தசா,புத்தி,அந்தரம்,சூர்ச்சமம் என்று பிரித்து உள்ளனர். என்னதான் திருமண தடங்கல் இருந்தலும் பிரார்த்தனை மற்றும் முயற்சி செய்தால் நடைபெறும் காலத்திலேயே திருமணத்தை கொடுப்பதற்கு வழி இருக்கும். எந்த கிரகம் நன்றாக உள்ளது என்று பார்த்து அந்த Vibration னை நம் உடலுக்கு கொண்டுவந்தால் போதும். 

மேலும் சிலர் ஒரு வருடம் இரண்டு வருடம் கழித்து ஜாதகத்தை எடுங்கள் என்பார்கள். மேலும் இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்று கொள்ளுங்கள் என்கிறனர். இது தவறு. இயர்கையை எதிர்பதற்கு நாம் யார்? எது எப்போது கிடைக்கும் என்பதை மட்டும் நம்முடைய ஜாதகத்தை வைத்து பார்க்கலாம். இதை இப்போது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று கூறுவது தவறு என்பது எனது கருத்து.

தொடர்புக்கு: astrovaasn@gmail.com

நன்றி 
SU.Suresh

Saturday, 26 April 2014

ஜோதிடமும் உடல் நலமும்



உண்மையான செல்வம் என்பது நோய் இல்லாத வாழ்கையே. ஆனால் கண் கெட்ட பிறகு தன சூரிய நமஸ்காரம் செய்கிறோம். என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் நம்முடைய தேவைகள் பூர்த்தி அடைய போவதில்லை.

மனம் பணம் எனும் மாயையை நோக்கி ஓடிக் கொண்டே இருகிறது. நம்முடைய உடலும் அதனை நோக்கியே ஓடுகிறது. மனதின் சிறு சிறு சந்தோசத்திற்காகவே நம்முடைய காலத்தை ஓட்டுகிறோம். அனால் ஒன்றை மறந்து விடுகிறோம். நாம் வேகமாக ஓட  வேண்டும் என்றால் நம்முடைய உடல் ஒத்து உழைக்க வேண்டும். ஆனால்  இன்றோ சிறிய வயதிலேயே பெரிய பெரிய விகதிகளை விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்.

நம்முடைய உடலானது 80 சதவீதம் வரை வியாதியை வெளியே காட்டது. ஆனால் வியாதி வெளி  வந்து விட்டால் அவ்வளவுதான். மருந்து மாதிரிகளை நோக்கி ஓட வேண்டியதுதான். இன்று ஒருவர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக  இருந்தால்   முதலில் தயாராவது மாத்திரை டப்பாக்கள் தான்.

ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக ஒருவருக்கு என்ன மாதிரியான வியாதிகள் வரும் என்பதனை கண்டுபிடிக்க முடியும். மேலும் ஒருவருக்கு என்ன மாதிரியான உணவு எளிதில் செரிமானம் ஆகும் என்பதனையும் கண்டு பிடிக்க முடியும்.

உதரணத்திற்கு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கீரை வகைகள், ரிசப ராசியில் பிறந்தவர்களுக்கு
பயிறு வகைகள் மற்றும் மிதுன ராசி காரர்கள் கேரட் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.

ஜோதிடம் ஒரு வழிகடியே. ஜோதிடத்தால் உடல் நிலையை மாற்ற முடியாது. ஆனால் ஒருவருக்கு வரும்
வியாதிகளை ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக முன்னரே  கண்டு பிடித்து அதற்கு தகுந்தாற்போல் உணவு பழக்க வழக்கத்தினை மாற்றி கொள்ளலாம்.

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

ஜோதிஷ ஆதித்யா SU.Suresh
astrovaasan@gmail.com
9952127002

Saturday, 5 April 2014

குல தெய்வ வழிபாடு







குல தெய்வம் என்பது நமது பரம்பரையில் வழி வழியாக நமது முன்னோர்கள் வழிபட்டு வந்த தெய்வம் தெய்வம் ஆகும். ஒருவருக்கு கெடுதல் நடைபெறுகிறது  என்றால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றே கூறலாம். என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது குல தெய்வ வழிபாடு செய்கின்றீர்களா? என்றுதான்.

முதலில் அதனை சரி செய்தால் போதும். நல்லவைகள் தானாகவே நடைபெறும். ஏன் என்றால் அந்த தெய்வம் நமது பரம்பரைக்ககவே உள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்கு நல்லதுதான் செய்யும். முடிந்தால் மாதம் ஒருமுறை அல்லது வருடம் ஒருமுறையாவது போய் வழிபட்டு வர வேண்டும்.

குலதெய்வத்தை வழிபடும் முறை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதனை உங்களது குடும்பத்தை சேர்ந்த வயதான நபர்களை கேட்டால் கண்டிபாக வழிபட்டு முறை கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் நமக்கு இல்லை என்பதை நாம் எளிதில் கண்டு பிடிக்கலாம். நாம் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்கள் உடையும். பொருள் திருடு போகும். அடிபடும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

மேலும் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகும். உதாரணத்திற்க்கு கோவிலுக்கு செல்ல முயலும் போது எல்லாம் ஒரு கேட்ட செய்தி வந்து போக முடியாமல் போகும். ஒருவருக்கு ஜாதகத்தில் 5ம் பாவம்(பூர்வ புண்ணியம்) கெட்டு இருந்தால் இவ்வாறு நடைபெறும். இவர்களுக்கு  அனைத்து காரியங்களும் தடங்கல் ஆகும்.

இவர்கள் தங்களது தொந்தத்தில் குல தெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் முதலில் சென்று வரலாம். அதன் பிறகு தனியாக செல்ல முயற்சி செய்யலாம். சிலருக்கு தனது குல தெய்வம் என்பது எது என்பது தெரியாது. அவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வத்தை அல்லது ஒரு பிடித்த அம்மனை எடுத்து கொள்ளலாம். கண்டிப்பாக நல்ல வழி பிறக்கும்.

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

நன்றி

சு. சுரேஷ்
http://jothidaanubavam.blogspot.in
astrovaasan@gmail.com

Friday, 4 April 2014

நன்றாக சம்பாதிக்க முடியுமா? - ஜாதகத்தில் வழி உண்டா?






அவசர உலகில் கை நிறைய சம்பாதித்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். நடப்பதோ பணம் இருபவரிடம் மட்டுமே பணம் சேருகிறது. ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் வேகமாக முன்னேறுகின்றனர்.

கடுமையாக உழைத்தும் கூட என்னால் முன்னேற முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் அதிகம். நமக்கு அதிஷ்டம் இல்லை என்று நொந்து கொண்டு இருந்து விடுகிறோம். அனால் ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்கும் வழி ஓன்று கண்டிப்பாக இருக்கும். அதனை உங்களுடைய ஜாதகத்தின் மூலமாக கண்டு பிடிக்கலாம்.

அந்த வழியில் நம்பிக்கையுடன் சென்றால்  கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கை,விடா முயற்சி மற்றும் சரியான வழி. இந்த சரியான வழி எது என்பதனை நம்முடைய ஜாதகம் காட்டும். நடப்பு தச புத்தி என்ன தரும் என்பதனை அறிந்து அதனை மட்டும் நேர்மையுடன் நம்பிக்கையுடன் செய்தால் போதும், வெற்றி நமதே.

மேலும் அந்த செயல்களை சரியான நேரம் பார்த்து நம்முடைய குல தெய்வத்தை வேண்டி ஆரம்பித்தால் போதும். அது வெற்றியுடன் தான் முடியும்.

சார ஜோதிட முறையில் செல்வ வளத்திற்கு குரு மற்றும் சுக்கிரன் காரகம் வகிக்கின்றனர். குருவை விட அதிக பலனை கொடுப்பவர் சுக்கிரன். அதனை அனுபவிப்பதற்கும் அவரே வழி வகுப்பவர். மேலும் பணத்தை கொடுத்துவிட்டு உடல் சுகத்தை எடுப்பதில் சுக்கிரனின் பங்கு அதிகம்.

சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் கெட்டால் பெண்,சுகர் மற்றும் அடம்பர வாழ்க்கை போன்றவற்றில் பிரச்சினைகள் வரும். இது தசா புத்தியை சார்ந்தது. அவை நன்றாக இருந்தால் தப்பிக்கலாம். எல்லோரும் பயப்பட வேண்டியது இல்லை.

ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் 2 பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் (அதாவது 2,4,6,10 என்ற பாவங்களுடன்) எளிதான முறையில் சம்பாதித்து சொத்து சேர்க்க முடியும். மேலும் ஒருவருடைய 12 பாவங்களையும் ஆராய்ந்து எந்த வழியில் நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பாவமும் ஒருவருக்கு எந்த முறையில் சுகத்தை, சிரமத்தை கொடுக்க போகின்றது என்பதனை ஒவ்வொன்றாக எழுதுகின்றேன்.

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

நன்றி

சு. சுரேஷ்
http://jothidaanubavam.blogspot.in
astrovaasan@gmail.com