வணக்கம் நண்பர்களே!
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஸ்ரீகுருங்காலீஸ்வரர்
ஆலயத்தின் உள் பிரகாரத்தில் கையில் வீணையின்றி ஞானத்தைப் புகட்டும் அபூர்வமான ஸ்ரீஞான
சரஸ்வதி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீஹயக்ரீவப் பெருமானின் முதல் சிஷ்யையே
இந்த ஸ்ரீஞான சரஸ்வதி.
பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் ஒவ்வொரு
புனர்பூச நட்சதிரத்தன்றும் 64 கலைகளுக்கும் உரியவளான ஸ்ரீஞான சரஸ்வதியைத் தொழுது, அதனுடன்
ஸ்ரீசரஸ்வதியின் குருவாகிய ஸ்ரீஹயக்ரீவரை மஞ்சள் நிற சாமந்திப் பூக்களால் ஆனா
கனத்த திண்டு மாலை சார்த்தி வழிபட்டு வந்தார்.
இவ்வாறு முறையாக வழிபட்டு வந்தமையால் ஜோதிடம்,
ஆரூடம், பட்சி சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சகல கலைகளிலும் வல்லவனாக
திகழ்ந்ததோடு “நடப்பவை அனைத்தும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது” என்ற ஞானத்தையும்
பெற்றான்.
எனவே குழந்தைகள் நன்றாக படிக்க, ஒவ்வொரு புனர்பூச
நட்சதிரத்தன்றும் ஸ்ரீஹயக்ரீவருக்கு சாமந்திப்பூ மாலை சார்த்தி, கற்கண்டு நிவேதனம்
செய்து அதனை ஏழைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக அளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து
செய்து வந்தால் கல்வியில் மந்தமாய் உள்ள குழந்தைகள் கூட படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு
நல்ல முன்னேற்றம் பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.
நன்றி நண்பர்களே!
SU. சுரேஷ் ஜோதிடர்
99521 27002
99521 27002