Saturday, 28 March 2015

குழந்தைகள் நன்கு படிக்க




வணக்கம் நண்பர்களே!

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஸ்ரீகுருங்காலீஸ்வரர் ஆலயத்தின் உள் பிரகாரத்தில் கையில் வீணையின்றி ஞானத்தைப் புகட்டும் அபூர்வமான ஸ்ரீஞான சரஸ்வதி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீஹயக்ரீவப் பெருமானின் முதல் சிஷ்யையே இந்த ஸ்ரீஞான சரஸ்வதி.

பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் ஒவ்வொரு புனர்பூச நட்சதிரத்தன்றும் 64 கலைகளுக்கும் உரியவளான ஸ்ரீஞான சரஸ்வதியைத் தொழுது, அதனுடன் ஸ்ரீசரஸ்வதியின் குருவாகிய ஸ்ரீஹயக்ரீவரை மஞ்சள் நிற சாமந்திப் பூக்களால் ஆனா கனத்த திண்டு மாலை சார்த்தி வழிபட்டு வந்தார்.

இவ்வாறு முறையாக வழிபட்டு வந்தமையால் ஜோதிடம், ஆரூடம், பட்சி சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சகல கலைகளிலும் வல்லவனாக திகழ்ந்ததோடு “நடப்பவை அனைத்தும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது” என்ற ஞானத்தையும் பெற்றான்.

எனவே குழந்தைகள் நன்றாக படிக்க, ஒவ்வொரு புனர்பூச நட்சதிரத்தன்றும் ஸ்ரீஹயக்ரீவருக்கு சாமந்திப்பூ மாலை சார்த்தி, கற்கண்டு நிவேதனம் செய்து அதனை ஏழைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக அளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கல்வியில் மந்தமாய் உள்ள குழந்தைகள் கூட படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நல்ல முன்னேற்றம் பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.     
நன்றி நண்பர்களே!


SU. சுரேஷ் ஜோதிடர்
99521 27002

Friday, 27 March 2015

தொழில் நிரந்தர வருமானம் யாருக்கு?



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,6 ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு தொழிலில் நிரந்தர வருமானம் கிடைக்கும். தன்னுடைய தொழில் போட்டியாளரை எளிதாக வீழ்த்தி விடுவார்.

மேலும் ஜாதகருக்கு தொழில் ரீதியான கடன் மிக எளிதாக கிடைக்கும். இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். ஆனால் ஜாதகர் தன்னுடைய பொருட்களை அதிக விலைக்கு விற்று நன்றாக சம்பாதிப்பார்.   

ஜாதகர் தான் செய்யும் தொழிலை மிகவும் பொறுப்புடன் நிதானமாக செய்வார். அதனால் தொழிலில் மிக எளிதாக வெற்றி பெறுவார்.    

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99521 27002

Thursday, 26 March 2015

ஜோதிடம் பார்க்க வேண்டுமா?




உயர் கணித சார ஜோதிட முறையில் ஆளும் கிரகம் கொண்டு உங்களுடைய பிறந்த நேரத்தினை சரி செய்து உங்களுக்கு உரிய பலன்களை pdf வடிவில் அனுப்பி வைக்கிறோம்.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்டான பலன்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
1.       உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய கிரகங்கள் எது?
2.       உங்களுக்கு கெடுதலை செய்யக்கூடிய கிரகம் எது?
3.       உங்களுக்கு பொருளாதாரத்தை கொடுக்கப் போகும் கிரகம் எது?
4.       உங்களுக்கு ராசியான எண் எது?
5.       உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் எந்த எண்ணில் இருக்க வேண்டும்?
6.       ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
7.       ஜாதகர் கௌரவமான நிலையில் இருப்பாரா?
8.       ஜாதகரின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்?
9.       ஜாதகருக்கு கண் நோய் உண்டா?
10.   வீடு வாகன யோகம் உண்டா?
11.   மற்றவரிடம் வேலை செய்வது சிறப்பா? அல்லது சொந்ததொழில் செய்வது சிறப்பா?
12.   தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் காலம் எது?
13.   அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா?
14.   குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும்?
15.   திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
16.   மனைவி வேலைக்கு செய்வாரா?
17.   காதல் வாழ்க்கை சிறப்பா?
18.   காதலில் வெற்றியா தோல்வியா?
19.   எதிரிகளால் தொல்லைகள் உண்டா?
20.   நண்பர்களால் தொல்லை உண்டா?
21.   கல்வி சிறப்பா?
22.   ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்குமா?
23.   கமிசன் வருமானம் உண்டா?
24.   ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடலாமா?
25.   அரசியலில் ஈடுபடலாமா?
26.   சினிமா துறையில் ஈடுபடலாமா?
27.   ஜோதிடம் படிக்க முடியாமா?
28.   எந்த துறையில் பணம் சம்பாதிக்க முடியும்?
29.   வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?

உங்களுடைய ஜாதகத்தினை ஆராய்ந்து 12 பாவன்களுக்குரிய முழு ஆய்வினையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதற்கு ஒருமுறை மட்டும் ரூ500  என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவற்றை astrovaasan@gmail.com மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.

Account Details:
Srinivasan Sundararajan
ICICI Bank Account Number: 001601529239
Trichy Road Branch Coimbatore
IFSC Code: ICIC0000016

Phone Number: 9952127002

நன்றி!
Su.சுரேஷ்

Wednesday, 25 March 2015

திருநீறும், குங்குமமும்


வணக்கம் நண்பர்களே!

சிலர் நெற்றியில் குங்குமத்தை மேலே இட்டு, திருநீற்றை கீழே இடுவார்கள். சிலர் குங்குமத்தை கீழே இட்டு திருநீற்றை மேலே இடுவார்கள். இவ்வாறு பலவிதமான முறைகளில் செய்கின்றோம். ஆனால் இது சரியா அல்லது தவறா என்ற ஆன்மீக விளக்கத்தினை பார்ப்போம்.

நெற்றியில் திருநீறு இட வேண்டும். புருவ மத்தியில் அல்ல. புருவ மத்தியில் இருந்து ஒரு அங்குலம் மேலே உயர்த்தியே திருநீறு இட வேண்டும். அதன் நடுவில் குங்குமம் இட வேண்டும்.

திருநீற்றையும் குங்குமத்தையும் பிரித்து மேலும் கீழுமாக அணிந்தால் சக்தி, சிவன் வேற்றுமையை காட்டியது போல் ஆகும்.

நெற்றியில் திருநீற்றைக் கீற்றுப் போல் அணிந்து அதன் நடுவில் குங்குமத்தை வைக்க வேண்டும். இல்லை என்றால் நெற்றிக்கு திரிசூர்ணம் (நாமம்) இடலாம். எவ்வாறு செய்யவில்லை என்றால் தவறு.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

Tuesday, 24 March 2015

பிள்ளையார் சுழி விளக்கம்



வணக்கம் நண்பர்களே!

“ஓம்என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து உருவானதே பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும். பிரணவம் தன்னைத் தானே விளக்கும் பொருட்டு வியஷ்டிப் பிரணவம், சமஷ்டிப் பிரணவம் என்று இரண்டாகப் பிரிந்தது.

வியஷ்டி, சமஷ்டிப் பிரணவ தத்துவங்களை கலியுக மக்களுக்குப் புரிய வைப்பது சிரமம் என்பதால் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி என்பவர் தன்னுடைய யோக நிலையில் இவ்விரண்டு பிரணவ ரூபங்களையும் இணைத்து அதன் நடுவே யோக சமாதி பூண்டு ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை உருவாக்கினார்.

இந்த யோக சமாதி நிலையைப் பெற்றிட ஸ்ரீவிநாயகப் பெருமானை ஓம்கார ரூப நாயகரை சங்கடஹர சதுர்த்தி தோறும் முறையாக சிறப்புற வழிபட்டு வந்தார்.

எனவே ‘உ’ என்னும் பிள்ளையார் சுழியை இடும் போதெல்லாம் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷியை தியானிக்க வேண்டும். 

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99521 27002


தொழில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு தொழிலில் கொடுக்கல் வாங்கலில் நிறைய பிரச்சினைகள் இருக்கும்.

மேலும் அவர்களுக்கு தொழில் முறையில் பணம் நிறைய வெளியே மாட்டிக் கொண்டு இருக்கும். தொழில் ரீதியாக ஜாதகருக்கு அதிக பிரயாணங்கள் இருக்காது. அதிக காலம் ஜாதகர் ஒரே தொழிலை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார். தொழிலில் மாற்றங்கள் என்பது இருக்காது. 

ஜாதகர் தொழில் செய்யும் இடம் சிறிய இடமாகவோ, அல்லது அதிக நெருக்கடி நிறைந்த இடமாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

நன்றி நண்பர்களே!


SU.Suresh
99521 27002

போட்டிகள் இல்லாமல் தொழில் செய்யும் யோகம் யாருக்கு?



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 3,9 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு தொழிலில் பெரிய போட்டிகள் இருக்காது. மேலும் அவர்கள் ஈடுபடும் தொழிலை நீண்ட காலம் செய்ய மாட்டார்கள்.

மேலும் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களுடைய தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சந்தையின் சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விலை நிர்ணயம் செய்து பொருட்களை விற்பார்.

எபோழுதும் கடையில் பொருட்களை இருப்பு வைத்து இருக்க மாட்டார். தொழில் ரீதியான பயணங்கள் நிறைந்ததாக இவருடைய வாழ்க்கை இருக்கும். மேலும் தொழில் சம்மந்தமான அணைத்து விசயங்களையும் கற்றறிந்தவராக இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh



Saturday, 14 March 2015

சொந்த ஊரில் தொழில் செய்யும் யோகம் யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 4,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தங்களுடைய தொழிலை சொந்த ஊரிலேயோ அல்லது வீட்டிலேயோ செய்வதற்க்கான அமைப்புகள் உண்டு.

அவருடைய தொழிலில் அதிக பண பரிமாற்றங்கள் இருக்கும். மேலும் அதிகமான பொருட்களை வாங்கி வைத்து இருப்பார். நியாயமான விலைக்கு பொருட்களை விற்பார். தொழிலில் நேர்மை அதிகம் இருக்கும்.

வாழ்க வளமுடன்.
SU.Suresh
9994690117 
கோவை.

Monday, 2 March 2015

கூட்டாளி இல்லாமல் தொழில் செய்யும் யோகம் யாருக்கு?




வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 6,12 ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் யாரையும் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

10ம் பாவம் 6,12 தொடர்பு கொண்ட ஜாதகருக்கு எப்பொழுதுமே வரவு மற்றும் செலவு சமமாகவே இருக்கும். தொழில் ரீதியில் கடன் வாங்கி அடைத்துக் கொண்டே இருப்பார்.

இந்த ஜாதகருக்கு இரண்டாவது தொழில் செய்யும் அமைப்பும் கிட்டும். 

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

வாழ்க வளமுடன்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh
9994690117
கோவை.