வணக்கம் நண்பர்களே!
சிலர் நெற்றியில் குங்குமத்தை மேலே இட்டு, திருநீற்றை கீழே இடுவார்கள். சிலர் குங்குமத்தை கீழே இட்டு திருநீற்றை மேலே இடுவார்கள். இவ்வாறு பலவிதமான முறைகளில் செய்கின்றோம். ஆனால் இது சரியா அல்லது தவறா என்ற ஆன்மீக விளக்கத்தினை பார்ப்போம்.
நெற்றியில் திருநீறு இட வேண்டும். புருவ மத்தியில் அல்ல. புருவ மத்தியில் இருந்து ஒரு அங்குலம் மேலே உயர்த்தியே திருநீறு இட வேண்டும். அதன் நடுவில் குங்குமம் இட வேண்டும்.
திருநீற்றையும் குங்குமத்தையும் பிரித்து மேலும் கீழுமாக அணிந்தால் சக்தி, சிவன் வேற்றுமையை காட்டியது போல் ஆகும்.
நெற்றியில் திருநீற்றைக் கீற்றுப் போல் அணிந்து அதன் நடுவில் குங்குமத்தை வைக்க வேண்டும். இல்லை என்றால் நெற்றிக்கு திரிசூர்ணம் (நாமம்) இடலாம். எவ்வாறு செய்யவில்லை என்றால் தவறு.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
No comments:
Post a Comment