Tuesday, 24 March 2015

பிள்ளையார் சுழி விளக்கம்



வணக்கம் நண்பர்களே!

“ஓம்என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து உருவானதே பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும். பிரணவம் தன்னைத் தானே விளக்கும் பொருட்டு வியஷ்டிப் பிரணவம், சமஷ்டிப் பிரணவம் என்று இரண்டாகப் பிரிந்தது.

வியஷ்டி, சமஷ்டிப் பிரணவ தத்துவங்களை கலியுக மக்களுக்குப் புரிய வைப்பது சிரமம் என்பதால் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி என்பவர் தன்னுடைய யோக நிலையில் இவ்விரண்டு பிரணவ ரூபங்களையும் இணைத்து அதன் நடுவே யோக சமாதி பூண்டு ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை உருவாக்கினார்.

இந்த யோக சமாதி நிலையைப் பெற்றிட ஸ்ரீவிநாயகப் பெருமானை ஓம்கார ரூப நாயகரை சங்கடஹர சதுர்த்தி தோறும் முறையாக சிறப்புற வழிபட்டு வந்தார்.

எனவே ‘உ’ என்னும் பிள்ளையார் சுழியை இடும் போதெல்லாம் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷியை தியானிக்க வேண்டும். 

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99521 27002


No comments:

Post a Comment