Tuesday, 30 June 2015

சுக்கிரன் + சந்திரன் இணைவு


வணக்கம் நண்பர்களே!

சந்திரன் சுக்கிரானுடன்  இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி சிரித்த முகத்துடன் இருப்பார். அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு கொண்டவர். சாந்தமான குணம் கொண்டவர். ஜாதகரின் மனைவிக்கு கருப்பையில் கோளாறு இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போகும்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

சுக்கிரன் + சூரியன் இணைவு



வணக்கம் நண்பர்களே!

சூரியன் சுக்கிரானுடன்  இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி அதிகார தோரணை கொண்ட நபராக இருப்பார். நல்லபடியாக குடும்பத்தை நடத்துபவராகவும், நிர்வாக திறமை கொண்டவராகவும் இருப்பார். இவரின் உடலில் அதிக சூடு இருக்கும். சற்று தான் என்ற அகம்பாவமும், கர்வமும் உடையவராக இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Friday, 19 June 2015

வெற்றி நம் கையில்


வணக்கம் நண்பர்களே!

இன்று ஒரு நண்பர் ஜாதகம் பார்க்க வந்து இருந்தார். தொழிலில் முன்னேற்றம் வேண்டும், தனியாக தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். மேலும் குடும்பத்தில் வரும் சண்டைகள் தீர வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையும் கூட.

சார ஜோதிட முறையில் அவருடைய ஜாதகத்தினை கணித்து நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு அவருக்கு தீர்வு கொடுக்கும் பொழுது சில நட்சத்ரங்கள் அவருக்கு ஆகாது என்று கூறினேன். மேலும் அந்த ஆகாத நட்சத்திரங்களின் தன்மைகள் கொண்ட பொருட்களை பட்டியல் இட்டு இவைகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டேன். அதாவது வீட்டின் அருகில் குப்பை மேடு, வேப்ப மரம் உள்ளதா? மற்றும்  ஆதிசேஷன் வழிபாடு மற்றும் துர்க்கை வழிபாடு உண்டா? என்று கேட்டேன்.

அவர்களின் பதில், சொந்த வீட்டின் அருகே புதிதாக குப்பைமேடு உருவாக்கினார்கள். அதன் பிறகு ஒரு வருட காலம் எங்களுக்கு பயங்கர பிரச்சினைகள் வந்தது. வீடு மாறி வாடகை வீட்டிற்கு வந்து விட்டோம். வீட்டின் வாசலில் ஒரு மிகப் பெரிய வேப்பமரம் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாம்பின் மேல் படுத்து இருக்கும் பெருமாளை வணங்கிவிட்டு தான் என்னுடைய அலுவலகம் செல்லுகின்றேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை துர்க்கை வழிபாடு செய்கிறேன் என்றார்.

நான் பட்டியல் இட்ட பிரச்சினை தரக் கூடிய நட்சத்திரங்களை பயன் படுத்தி வருகிறார். அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்க்க சொல்லிவிட்டு பணத்திற்கும், புதிய தொழில் செய்வதற்கும் நட்சத்திரத்தை எடுத்து கொடுத்து அனுப்பினேன்.

நான் இதனை எதற்காக எழுதுகிறேன் என்றால் நமக்கு பிரச்சினை அதுவாக வருவது இல்லை. நாமே நமக்கு பிடித்த பொருட்கள் மற்றும் செயல்களின் மூலமாக பிரச்சினைகளை தேடிக் கொள்ளுகின்றோம்.

சார ஜோதிட முறையில் அணைத்து பிரச்சினைகளுக்கும் தசா நாதன் புத்தி நாதனுக்கு பரிகாரம் செய்யாமல், ராகு,கேது,சனி,குருவிற்கு பரிகாரம் செய்யாமல் நாம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாக சில குறிப்பிட்ட வழிபாட்டின் மூலமாக, தேவை இல்லாத அனைத்து பொருட்களையும் வெளியேற்றுவதன் மூலமாக வழமான வாழ்வு வாழ வழி கிடைக்கும்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
99946 90117 

சூரியன் + ராகு (அ) சூரியன் + கேது இணைவு


வணக்கம் நண்பர்களே!

பிருகு நாடி முறையில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் இணைந்து உள்ளதோ, அந்த கிரகங்கள் குறிக்கும் அவையங்கள் சரியாக செயல்படாது அல்லது அந்த அவையங்களில் பிரச்சினைகள் இருக்கும் என்பது விதி.

சூரியனுடன் ராகுவோ கேதுவோ சேர்ந்து இருந்தால் சூரியன் குறிக்கும் அவையங்களில் அதாவது வலது கண்,எலும்பு, தலை,நெற்றி, பித்தப்பை, விந்துவில் உள்ள உயிரணுக்களில் பிரச்சினைகள் இருக்கும்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99946 90117


குரு + ராகு (அ) குரு + கேது இணைவு




வணக்கம் நண்பர்களே!

பிருகு நாடி முறையில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் இணைந்து உள்ளதோ, அந்த கிரகங்கள் குறிக்கும் அவையங்கள் சரியாக செயல்படாது அல்லது அந்த அவையங்களில் பிரச்சினைகள் இருக்கும் என்பது விதி.

உதாரணமாக குருவுடன் ராகுவோ கேதுவோ சேர்ந்து இருந்தால் குரு குறிக்கும் அவையங்களில் அதாவது மூக்கு, நாசி, தொடை, பாதம், தசை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

99946 90117

துளசி வழிபாடு


வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடி இருக்க வேண்டும். கிருஷ்ண துளசியாக (சிறிது கருப்பாக இருக்கும்) இருந்தால் இரட்டைச் செடியாகத்தான் வைக்க வேண்டும்.

தினமும் நீர் தெளிக்க வேண்டும். நீரை ஊற்றக் கூடாது. செடியின் மேல் (தேவையான அளவு) தெளிக்க வேண்டும். அடியில் அளவோடு இறை நாமம் ஜபிக்க வேண்டும்.

துளசிச் செடியை வீட்டில் முன்புறத்தில்தான் வைக்க வேண்டும். வசதி இருந்தால் முற்றத்தில் வைக்கலாம். தற்காலத்தில் வீட்டில் பின்புறத்தில்  (கொல்லைப் பக்கம்) துளசியை வைக்கிறார்கள். இது தவறு.

துளசி சகுனம் ஒப்பற்ற சகுனம். வெளியில் கிளம்புகையில் துளசியை வணங்கி விட்டுக் கிளம்பினால் வேறு எந்த சகுனமும் ஒன்றும் செய்யாது. வீட்டின் முகப்பில் உள்ள துளசிச் செடி காற்று சேஷ்டை, தீய சக்திகளை உள்ளே வராமல் காக்கும்.

வெளியில் சென்று வீடு திருபியவுடன் கை, கால் அலம்பி, துளசியைத் தரிசனம் செய்து வீட்டிற்குள் செல்ல வேண்டும். இதனால் வெளியே நம் மீது படிந்த தீய சக்திகளோ, தீய எண்ணங்களோ நம்மைத் தொடரும் தீய ஆவிகளோ வீட்திற்குள் புகாமல் துளசிச் செடி தடுத்து நம்மைக் கவசம் போல் காக்கிறது.

பெண்கள் திருமணமாகி வேறு இடம் சென்றால் கூட துளசி தேவியிடம் விடைபெற்றுச் செல்ல வேண்டும். திரும்பவும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அப்பெண் துளசிச் செடியை வணங்க வேண்டும். ஏனென்றால் அன்புடம் தண்ணீர் ஊற்றியவர் மாறி விட்டால் அல்லது சொல்லாமல் போய் விட்டால் துளசிச் செடி வாடிவிடும்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99946 90117   

Friday, 12 June 2015

நம்பினால் நம்புங்கள் – 1



கனவுகள் வரக் காரணம்

வணக்கம் நண்பர்களே!

அனைத்து கனவுகளும் உண்மையே!. ஆனால் அவற்றுக்குப் பொருள் தெரியாததால் தான் நாம் தவிக்கிறோம். ஒவ்வொரு கனவிற்கும் பல ரகசியங்கள் உண்டு. பல அர்த்தங்கள் உண்டு. சில நேரங்களில் நாம் அமர்ந்து கனவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்தல் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு கனவுகள் எல்லாம் வரும், வந்து இருக்கும்.

கனவுகள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவை,

·         சிலருக்கு முன்வினையில் அவர்கள் செய்த நினைவுகள் எல்லாம் இந்த ஜென்மத்தில் கனவுகளாக வருவதுண்டு.

·         எப்பொழுதோ அல்லது அடுத்த கனமோ அல்லது எதிர்காலத்தில் நிகழப் போவதும் கனவுகளாக வருவதுண்டு.

·         அடுத்த பிறவியில் நாம் என்ன ஆவோம்? என்பதும் கனவாக வருவதுண்டு.

கனவுகளுக்கு பொருள் தெரியாததால் சிலர் அவற்றைப் பொய் என்று சொல்லி விடுகின்றனர். ஆனால் அதன் பிறகு கனவில் வந்த மாதிரி நடந்தது என்றால் அதைப் பிறரிடம் சொன்னாலும் நம்புவதற்கு ஆள் கிடையாது. கனவுகள் ஒருபொழுதும் பொய்ப்பது கிடையாது. ஆனால் கனவு எதனால் வந்தது? அது எப்படிப்பட்டது? என்பதைப் புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினமாக இருக்கறது.

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99946 90117



வீடு வாங்கும் முன்பு


ஓம்

வணக்கம் நண்பர்களே!

இன்று எலோருடைய கனவும் ஒரு வீடு வாங்குவதே. பழைய அல்லது புதிய வீடு எது வாங்கினாலும் நாம் முதலில் பார்ப்பது நாம் எதிர்பார்க்கும் விலைக்கு வீடு கிடைக்கிறதா என்பதைத் தான்.

ஆனால் கட்டிய புதிய வீடு வாங்குவதில் இந்த பிரச்சினையும் இல்லை. அதாவது அந்த வீட்டில் நீங்கள் தான் முதலில் பால் காய்ச்சி குடியேறப் போகின்றீகள் என்றல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வாஸ்து சம்மந்தமான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டு வாங்கிவிடுங்கள்.

விற்ப்பனைக்கு வரும் சில வீடுகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். வீடு கட்டி குடி இருப்பார்கள். லோன் கட்ட முடிய வில்லை, கடன் அதிகமாகி விட்டது அதனால் விற்கிறோம் என்று விற்க வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசினால் எளிதில் குறைவான விலைக்கு கிடைத்துவிடும். நீங்களும் சாந்தோசமாக குடி போவீர்கள்.

அப்புறம் தான் ஆரம்பிக்கும் பிரச்சினை. அந்த வீடு கட்டியதால் என்ன என்ன பிரச்சினைகள் அவர்களுக்கு வந்ததோ அந்த பிரச்சினைகள் உங்களுக்கு வரும். அந்த வீட்டில் எதோ பிரச்சினை உள்ளது. அதனால் அவர்களை கஷ்டப் படுத்தி பிரச்சினைகளை அனுபவிக்க விட்டு விட்டது. மேலும் அவர்கள் எவ்வளவு ஆசை ஆசையாக அந்த வீட்டினை கட்டி இருப்பார்கள். அவர்களின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விலை கம்மியாக பேசி வாங்கி விடுவீர்கள்.

வீட்டினை உங்களுக்கு கொடுத்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலும் உங்களுக்கு சாபம் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள் இல்லையா? ஏனென்றால் அவர்கள் விற்ற வீட்டினை அவர்களால் மறக்க முடியாது. எனவே உங்களுடைய வாழ்க்கையில் ஒரு வீடு வாங்கப் போய் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

மேலும் நீங்கள் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை பார்த்து இந்த வீடு வாங்கியவுடன் தான் பிரச்சினை வருகிறது. அதனை விற்றுவிடுவோம் என்று அந்த வீட்டினை விற்க முயன்றாலும் உங்களால் முடியாது. கண்டிப்பாக அந்த வீட்டினை கட்டியவர்கள் எப்படி கடனில் மாட்டி வேறு வழி இல்லாமல் வீட்டை விற்று விட்டு போனார்களோ அது மாதிரி தான் போக வேண்டி வரும்.

அதனால் வீடு விற்ப்பதன் காரணத்தை தெரிந்து கொண்டு வீடு வாங்குங்கள். அதே போல வாடைக்கு போகும் முன்பும் வீடு கிடைத்துவிட்டது என்று ஓடி விடாதீர்கள். அதற்க்கு முன்வு யார் இருந்தார்கள். அவர்கள் எத்தனை காலம் அந்த வீட்டில் இருந்தார்கள். ஏன் காலி செய்து கொண்டு போகின்றார்கள் என்பதனை தெரிந்து கொண்டு செல்லுங்கள்.

தவறான வீட்டினை வாங்குவது அல்லது வாடகைக்கு செல்லுவது நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உங்களை கீழே தள்ளிவிடும்.

நான் இங்கு கூறியவை ஆன்மீக நம்பிக்கை உடையவர்களுக்கு தான். மற்றவர்கள் அவர்கள் வழியில் சென்று பிரச்சினையை சமாளித்துக் கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117