ஓம்
வணக்கம் நண்பர்களே!
இன்று எலோருடைய கனவும் ஒரு வீடு வாங்குவதே. பழைய அல்லது புதிய வீடு
எது வாங்கினாலும் நாம் முதலில் பார்ப்பது நாம் எதிர்பார்க்கும் விலைக்கு வீடு
கிடைக்கிறதா என்பதைத் தான்.
ஆனால் கட்டிய புதிய வீடு வாங்குவதில் இந்த பிரச்சினையும் இல்லை.
அதாவது அந்த வீட்டில் நீங்கள் தான் முதலில் பால் காய்ச்சி குடியேறப் போகின்றீகள்
என்றல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வாஸ்து சம்மந்தமான பிரச்சினைகள் எதுவும் இல்லை
என்பதனை உறுதி செய்து கொண்டு வாங்கிவிடுங்கள்.
விற்ப்பனைக்கு வரும் சில வீடுகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். வீடு
கட்டி குடி இருப்பார்கள். லோன் கட்ட முடிய வில்லை, கடன் அதிகமாகி விட்டது அதனால்
விற்கிறோம் என்று விற்க வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசினால் எளிதில் குறைவான
விலைக்கு கிடைத்துவிடும். நீங்களும் சாந்தோசமாக குடி போவீர்கள்.
அப்புறம் தான் ஆரம்பிக்கும் பிரச்சினை. அந்த வீடு கட்டியதால் என்ன
என்ன பிரச்சினைகள் அவர்களுக்கு வந்ததோ அந்த பிரச்சினைகள் உங்களுக்கு வரும். அந்த
வீட்டில் எதோ பிரச்சினை உள்ளது. அதனால் அவர்களை கஷ்டப் படுத்தி பிரச்சினைகளை
அனுபவிக்க விட்டு விட்டது. மேலும் அவர்கள் எவ்வளவு ஆசை ஆசையாக அந்த வீட்டினை கட்டி
இருப்பார்கள். அவர்களின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விலை கம்மியாக
பேசி வாங்கி விடுவீர்கள்.
வீட்டினை உங்களுக்கு கொடுத்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலும்
உங்களுக்கு சாபம் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள் இல்லையா? ஏனென்றால் அவர்கள்
விற்ற வீட்டினை அவர்களால் மறக்க முடியாது. எனவே உங்களுடைய வாழ்க்கையில் ஒரு வீடு
வாங்கப் போய் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
மேலும் நீங்கள் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை பார்த்து இந்த வீடு வாங்கியவுடன்
தான் பிரச்சினை வருகிறது. அதனை விற்றுவிடுவோம் என்று அந்த வீட்டினை விற்க
முயன்றாலும் உங்களால் முடியாது. கண்டிப்பாக அந்த வீட்டினை கட்டியவர்கள் எப்படி
கடனில் மாட்டி வேறு வழி இல்லாமல் வீட்டை விற்று விட்டு போனார்களோ அது மாதிரி தான்
போக வேண்டி வரும்.
அதனால் வீடு விற்ப்பதன் காரணத்தை தெரிந்து கொண்டு வீடு வாங்குங்கள்.
அதே போல வாடைக்கு போகும் முன்பும் வீடு கிடைத்துவிட்டது என்று ஓடி விடாதீர்கள்.
அதற்க்கு முன்வு யார் இருந்தார்கள். அவர்கள் எத்தனை காலம் அந்த வீட்டில்
இருந்தார்கள். ஏன் காலி செய்து கொண்டு போகின்றார்கள் என்பதனை தெரிந்து கொண்டு
செல்லுங்கள்.
தவறான வீட்டினை வாங்குவது அல்லது வாடகைக்கு செல்லுவது நீங்கள் எவ்வளவு
உயரத்தில் இருந்தாலும் உங்களை கீழே தள்ளிவிடும்.
நான் இங்கு கூறியவை ஆன்மீக நம்பிக்கை உடையவர்களுக்கு தான். மற்றவர்கள்
அவர்கள் வழியில் சென்று பிரச்சினையை சமாளித்துக் கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment