Friday, 19 June 2015

வெற்றி நம் கையில்


வணக்கம் நண்பர்களே!

இன்று ஒரு நண்பர் ஜாதகம் பார்க்க வந்து இருந்தார். தொழிலில் முன்னேற்றம் வேண்டும், தனியாக தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். மேலும் குடும்பத்தில் வரும் சண்டைகள் தீர வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையும் கூட.

சார ஜோதிட முறையில் அவருடைய ஜாதகத்தினை கணித்து நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு அவருக்கு தீர்வு கொடுக்கும் பொழுது சில நட்சத்ரங்கள் அவருக்கு ஆகாது என்று கூறினேன். மேலும் அந்த ஆகாத நட்சத்திரங்களின் தன்மைகள் கொண்ட பொருட்களை பட்டியல் இட்டு இவைகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டேன். அதாவது வீட்டின் அருகில் குப்பை மேடு, வேப்ப மரம் உள்ளதா? மற்றும்  ஆதிசேஷன் வழிபாடு மற்றும் துர்க்கை வழிபாடு உண்டா? என்று கேட்டேன்.

அவர்களின் பதில், சொந்த வீட்டின் அருகே புதிதாக குப்பைமேடு உருவாக்கினார்கள். அதன் பிறகு ஒரு வருட காலம் எங்களுக்கு பயங்கர பிரச்சினைகள் வந்தது. வீடு மாறி வாடகை வீட்டிற்கு வந்து விட்டோம். வீட்டின் வாசலில் ஒரு மிகப் பெரிய வேப்பமரம் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாம்பின் மேல் படுத்து இருக்கும் பெருமாளை வணங்கிவிட்டு தான் என்னுடைய அலுவலகம் செல்லுகின்றேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை துர்க்கை வழிபாடு செய்கிறேன் என்றார்.

நான் பட்டியல் இட்ட பிரச்சினை தரக் கூடிய நட்சத்திரங்களை பயன் படுத்தி வருகிறார். அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்க்க சொல்லிவிட்டு பணத்திற்கும், புதிய தொழில் செய்வதற்கும் நட்சத்திரத்தை எடுத்து கொடுத்து அனுப்பினேன்.

நான் இதனை எதற்காக எழுதுகிறேன் என்றால் நமக்கு பிரச்சினை அதுவாக வருவது இல்லை. நாமே நமக்கு பிடித்த பொருட்கள் மற்றும் செயல்களின் மூலமாக பிரச்சினைகளை தேடிக் கொள்ளுகின்றோம்.

சார ஜோதிட முறையில் அணைத்து பிரச்சினைகளுக்கும் தசா நாதன் புத்தி நாதனுக்கு பரிகாரம் செய்யாமல், ராகு,கேது,சனி,குருவிற்கு பரிகாரம் செய்யாமல் நாம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாக சில குறிப்பிட்ட வழிபாட்டின் மூலமாக, தேவை இல்லாத அனைத்து பொருட்களையும் வெளியேற்றுவதன் மூலமாக வழமான வாழ்வு வாழ வழி கிடைக்கும்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
99946 90117 

No comments:

Post a Comment