வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடி இருக்க வேண்டும்.
கிருஷ்ண துளசியாக (சிறிது கருப்பாக இருக்கும்) இருந்தால் இரட்டைச் செடியாகத்தான்
வைக்க வேண்டும்.
தினமும் நீர் தெளிக்க வேண்டும். நீரை ஊற்றக்
கூடாது. செடியின் மேல் (தேவையான அளவு) தெளிக்க வேண்டும். அடியில் அளவோடு இறை நாமம்
ஜபிக்க வேண்டும்.
துளசிச் செடியை வீட்டில் முன்புறத்தில்தான்
வைக்க வேண்டும். வசதி இருந்தால் முற்றத்தில் வைக்கலாம். தற்காலத்தில் வீட்டில்
பின்புறத்தில் (கொல்லைப் பக்கம்) துளசியை
வைக்கிறார்கள். இது தவறு.
துளசி சகுனம் ஒப்பற்ற சகுனம். வெளியில்
கிளம்புகையில் துளசியை வணங்கி விட்டுக் கிளம்பினால் வேறு எந்த சகுனமும் ஒன்றும்
செய்யாது. வீட்டின் முகப்பில் உள்ள துளசிச் செடி காற்று சேஷ்டை, தீய சக்திகளை உள்ளே வராமல் காக்கும்.
வெளியில் சென்று வீடு திருபியவுடன் கை, கால் அலம்பி,
துளசியைத் தரிசனம் செய்து வீட்டிற்குள் செல்ல வேண்டும். இதனால் வெளியே நம் மீது
படிந்த தீய சக்திகளோ, தீய எண்ணங்களோ நம்மைத் தொடரும் தீய ஆவிகளோ வீட்திற்குள்
புகாமல் துளசிச் செடி தடுத்து நம்மைக் கவசம் போல் காக்கிறது.
பெண்கள் திருமணமாகி வேறு இடம் சென்றால் கூட
துளசி தேவியிடம் விடைபெற்றுச் செல்ல வேண்டும். திரும்பவும் வீட்டிற்கு வரும்
போதெல்லாம் அப்பெண் துளசிச் செடியை வணங்க வேண்டும். ஏனென்றால் அன்புடம் தண்ணீர்
ஊற்றியவர் மாறி விட்டால் அல்லது சொல்லாமல் போய் விட்டால் துளசிச் செடி வாடிவிடும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
99946 90117
No comments:
Post a Comment