Friday, 12 February 2016
Monday, 8 February 2016
தம்பதியர் ஒற்றுமைக்கு
வணக்கம் நண்பர்களே!
ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரரை வழிபடும் முறையைப் பலரும் அறியாமல் உள்ளனர்.
ஈஸ்வரன் அம்பிகை திருக்கல்யாணத்தில் இறைவனின் உத்தம ஸ்பரிஸம் பெற்றுப் பரமானந்தம்
பூண்ட அம்பிகை தம் திருக்கரங்களால் சுவாமிக்குப் பாத பூஜை செய்து ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரக்
கோலத்தில் பங்கு பெற்றால். இது நிகழ்ந்த காலமே உத்தர நட்சத்திரமும், ஹஸ்த
நட்சத்திரமும் சங்கமிக்கும் நேரமாகும்.
எனவே உத்திர நட்சத்திரம் முடிந்து ஹஸ்த நட்சத்திரம் துவங்கும்
காலத்தில் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரருக்குத் தளசி வில்வம் கலந்து தொடுத்த மாலையச்
சார்த்தி சந்தனமும், புனுகும் கலந்த பொட்டும், குங்குமமும் இட்டுத் தம்பதி சகிதம்
வணங்கி வந்தால் மனம் ஒருமித்த நல்வாழ்வு அமையும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
குழந்தைகள் நன்கு படிக்க
வணக்கம் நண்பர்களே!
கும்பகோணம் – ஆடுதுறை அருகே உள்ள கதிரா மங்கலத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
ஆலயத்தில் அருளும் ஸ்ரீஞானாம்பிகை தேவியே குழந்தைகளுக்கும்,
சிறுவர்-சிறுமிகளுக்கும் நல்ல ஞானத்தைத்
தருபவள் ஆவாள்.
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உரித்தான நவமி திதியில் இங்கு ஸ்ரீஞானாம்பிகைக்குத்
தாமே அரைத்த சந்தனக் காப்பு இட்டு, முழு முந்திரிப் பருப்பினை அந்தச் சந்தனக்
காப்பில் பதித்து ஞான சக்திகள் கொண்ட வெண்டைக்காய், பாதாம் பருப்பு சிறு திராட்சை
போன்றவை கலந்த வெண் பொங்கலை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால்,
குழந்தைகளுக்கு ஞான அருள் பொழிவை ஸ்ரீஞானாம்பிகையே மனமுவந்து அருளிடுவாள்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117கண் நோய்கள் தீர
வணக்கம் நண்பர்களே!
அவிநாசி அருகே உள்ள கருவலூர் ஸ்ரீகங்காதர ஈஸ்வர ஆலயத்தின் பாஸ்கரத்
தீர்த்தம் கண் நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. ஆயிரமாயிரம் கண்களை உடைய
கண்ணாயிர நேத்ர தேவதைகள் எப்போழுதும் சஞ்சரிக்கும் அற்புதத் தீர்த்தம்.
சூரியோதய நேரத்தில் இத்தீர்த்தமருகே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி,
ஸ்ரீசூரிய பகவானுக்கு அர்க்கியம் அளித்து, பாசன்குளி முத்திரை எட்டு ஸ்ரீசூரிய
பகவானை தரிசிக்க வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையோடு அம்பிகையை வணங்கி கீரை வகை
உணவுகளை ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் எத்தகைய கண் நோய்களுக்கும் தக்க
நிவாரணம் பெறலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Saturday, 6 February 2016
மனைவி மூலம் பிரச்சினை யாருக்கு?
வணக்கம் நண்பர்களே!
சுக்கிரன் இருக்கும் ராசியில் இருந்து கேது 1,2,5,9 இடங்களில் இருந்தால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
பிரிவுகள் உண்டு.
வழக்குகளை சந்திக்க நேரிடும்.
சுக்கிரன் + கேது தொடர்புடன் குரு இணைவு இருந்தால் பிரச்சினைகள் குறைவு.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Thursday, 4 February 2016
மனைவி மூலம் அதிஷ்டம் யாருக்கு?
வணக்கம் நண்பர்களே!
சனி இருக்கும் ராசியில்
இருந்து சுக்கிரன் 1,2,5,9 இடங்களில் இருந்தால் ஜாதகரின் மனைவி வேலைக்கு செல்பவராக
இருப்பார். மனைவி வசதியான இடத்தில் இருந்து வருவார்.
திருமணதிற்கு பின்பு வண்டி வாகன யோகம் உண்டு.
அழகான வீடு அமையும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
99946 90117
Wednesday, 3 February 2016
தொழிலில் தடை யாருக்கு?
வணக்கம் நண்பர்களே!
சனி இருக்கும் ராசியில்
இருந்து கேது 1,2,5,9 இடங்களில் இருந்தால் செய்யும் தொழிலில் தடைகள் அதிகம்
வரும். திருப்தி இருக்காது. பணத்தினை தேடி மனம் செல்லாது. விரக்தி மற்றும்
தனிமையான எண்ணங்கள் தோன்றும்.
ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் போன்ற கேதுவின் காரகத்துவம்
கொண்ட துறைகளில் செல்வது சற்று பிரச்சினைகளை குறைக்கும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
99946 90117
Tuesday, 2 February 2016
குழந்தை பாக்கியம் பெற
வணக்கம் நண்பர்களே!
வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை ஸ்ரீமைத்தடங்கண்ணி சமேத ஸ்ரீஅமிர்த
கடேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் அபூர்வமான அமிர்த தீர்த்தக் கிணறு உள்ளது. இத்தீர்த்தத்தைப்
பிரசாதமாக பெற்று, ஒரு வெண்கலச் செம்பில் நிரப்பிக் கொள்ளவும். ஸ்ரீமுருகப்
பெருமானுக்கு உகந்த பரணி, விசாகம், கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களும்,
செவ்வாய்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களும் சேர்ந்து வருகின்ற தினங்களில் இந்தத்
தீர்த்தச் செம்புடன் இக்கோயிலை வலம் வந்து தரிசித்து பிள்ளைப் பேற்றுக் காய்
எனப்படும் முழு முந்திரிப் பலங்களை ஏழைகளுக்கு தானமாக அளித்து வருவதால் இறை
அருளால் பிள்ளைப் பேற்றுக்கான நல்வழிகள் காட்டப் பெறுவார். முழு முந்திரிப்
பருப்பை வெண்ணிற பால் பாயசத்தில் இட்டு தானமாக அளித்தாலும் சிறப்பானது.
ஏனைய தினங்களில் வரும் செவ்வாய் ஹோரை நேரத்திலும் குறிப்பாக செவ்வாய்
கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்திலும் இவ்வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Monday, 1 February 2016
இருதய நோயால் இறந்தோருக்கு
வணக்கம் நண்பர்களே!
ஆஸ்துமா மற்றும் இருதய நோய் காரணமாக இறந்தோரின் ஆன்மா நல்ல முறையில்
சாந்தி அடைய அவர்கள் இறந்த திதி நாட்களில் ஸ்ரீஜூரஹரேஸ்வர லிங்கத்திற்க்குத் தூய எள்
சேர்ந்த வெண்ணைக் காப்பிட்டு எள், வெல்லம், பிரண்டை, புடலங்காய் போன்ற பித்ரு
சக்தி நிறைந்த உணவை தானமாக அளிக்க வேண்டும். தஞ்சாவூர் கரந்தட்டாங்குடி சிவாலயதில்
லிங்க மூர்தியாகவே ஸ்ரீஜூரஹரேஸ்வர மூர்த்தி எழுந்தருளி உள்ளார்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Subscribe to:
Posts (Atom)