Tuesday, 2 February 2016

குழந்தை பாக்கியம் பெற


வணக்கம் நண்பர்களே!

வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை ஸ்ரீமைத்தடங்கண்ணி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் அபூர்வமான அமிர்த தீர்த்தக் கிணறு உள்ளது. இத்தீர்த்தத்தைப் பிரசாதமாக பெற்று, ஒரு வெண்கலச் செம்பில் நிரப்பிக் கொள்ளவும். ஸ்ரீமுருகப் பெருமானுக்கு உகந்த பரணி, விசாகம், கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களும், செவ்வாய்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களும் சேர்ந்து வருகின்ற தினங்களில் இந்தத் தீர்த்தச் செம்புடன் இக்கோயிலை வலம் வந்து தரிசித்து பிள்ளைப் பேற்றுக் காய் எனப்படும் முழு முந்திரிப் பலங்களை ஏழைகளுக்கு தானமாக அளித்து வருவதால் இறை அருளால் பிள்ளைப் பேற்றுக்கான நல்வழிகள் காட்டப் பெறுவார். முழு முந்திரிப் பருப்பை வெண்ணிற பால் பாயசத்தில் இட்டு தானமாக அளித்தாலும் சிறப்பானது.

ஏனைய தினங்களில் வரும் செவ்வாய் ஹோரை நேரத்திலும் குறிப்பாக செவ்வாய் கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்திலும் இவ்வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment