வணக்கம் நண்பர்களே!
ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரரை வழிபடும் முறையைப் பலரும் அறியாமல் உள்ளனர்.
ஈஸ்வரன் அம்பிகை திருக்கல்யாணத்தில் இறைவனின் உத்தம ஸ்பரிஸம் பெற்றுப் பரமானந்தம்
பூண்ட அம்பிகை தம் திருக்கரங்களால் சுவாமிக்குப் பாத பூஜை செய்து ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரக்
கோலத்தில் பங்கு பெற்றால். இது நிகழ்ந்த காலமே உத்தர நட்சத்திரமும், ஹஸ்த
நட்சத்திரமும் சங்கமிக்கும் நேரமாகும்.
எனவே உத்திர நட்சத்திரம் முடிந்து ஹஸ்த நட்சத்திரம் துவங்கும்
காலத்தில் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரருக்குத் தளசி வில்வம் கலந்து தொடுத்த மாலையச்
சார்த்தி சந்தனமும், புனுகும் கலந்த பொட்டும், குங்குமமும் இட்டுத் தம்பதி சகிதம்
வணங்கி வந்தால் மனம் ஒருமித்த நல்வாழ்வு அமையும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment