Thursday, 29 January 2015

ஆன்மீக சக்தியை பெருக்கும் எளிய வழி



வணக்கம் நண்பர்களே!

தலைமுடியில் ஆன்மீக சக்தி தங்குகிறது. தலைமுடியை வெட்டாமல் வளர விடுவதால் எளிதாக ஆன்மீக சக்த்தியைப் பெருக்கலாம். ஆனால் அடிக்கடி முடியை வாரி சிக்கல், பிசுக்கு இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பெண்கள் எக்காரணம் கொண்டும் முன் முடியை FASHION என்று சொல்லி வெட்டவோ குறைக்கவோ புருவத்தைச் சிரைக்கவோ கூடாது. இதனால் நம்மிடம் உள்ள ஆன்மீக சக்திகள் நம்மை விட்டு போய்விடும்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

Sunday, 25 January 2015

ஜாதகருக்கு பூர்வீக சொத்து உண்டா?




வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் ஒருவருக்கு பூர்வீக சொத்து உண்டா இல்லையா என்பதனை மிக எளிதாக கண்டறியலாம். அதாவது 9ம் பாவத்தினை கொண்டு அறியலாம்.

யாருக்கு 9ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு பூர்வீக சொத்து உண்டு. கண்டிப்பாக இவருக்கு 4ம் பாவமும் சாதகமாக இருக்க வேண்டும்.

ஆனால் 9ம் பாவம் 3 பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் பூர்வீக சொத்தினை ஜாதகர் விற்று விடுவார்.

மேலும் யாருக்கு 9ம் பாவம் 3,7,11 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு பூர்வீக சொத்து அமையாது அல்லது அதனை விற்று விடுவார்கள்.

அடுத்து 9 பாவம் 4,8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் பூர்வீக சொத்தினால் பல பிரச்சினைகளை மற்றும் அசிங்க அவமானங்களை அனுபவிப்பர்.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ் 
9994690117

Saturday, 24 January 2015

நல்ல உத்தியோகம் கிடைக்க



ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

கோயிலில் முதல் நாள் இறைவனுக்கு அணிவித்த பூக்களை மறுநாள் காலையில் களைவார்கள். இவற்றிக்கு நிர்மால்யப் பூக்கள் என்று பெயர். இப்பூக்களை காலில் மிதி படாமல் நதியிலோ, கடலிலோ, நீரில்லாத கிணற்றிலோ சேர்த்திட வேண்டும். அருகில் நதியோ அல்லது கடலோ இல்லாவிடில் வாரம் ஒரு முறையேனும் அவற்றை ஒன்றாகச் சேர்த்து நதி, கடல், நீரற்றுக் கிடக்கும் கின்று இருக்குமிடம் சென்று சேர்ப்பது மிகச் சிறந்த இறைத் திருப்பணி ஆகும்.

வேலையின்றி அவதியுறுவோர் பாடல் பெற்ற கோயிலையோ அல்லது தனக்கு இஷ்டமான கோயிலையோ தேர்ந்தெடுத்து நாள்தோறும் நிர்மால்யப் பூக்களை மேற்கண்ட முறையில் நீரில் சேர்ப்பது அற்புதமான இறைத் திருப்பணியாகும். இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும்.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்
9994690117



Saturday, 17 January 2015

பூர்வீக சொத்து


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 9ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு பூர்வீக சொத்து இருக்காது. மேலும் அவர்களுக்கு பரம்பரை நோய் வராது. 

ஜாதகருக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்புகள் அதிகம் இருக்கும். இவர்களுக்கு மிக எளிதாக வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உயர்கல்வி இவர்களுக்கு எளிதாக கிட்டும்.   

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்
9994690117

Sunday, 11 January 2015

தேர்வில் வெற்றி பெற



ஓம் குருவே சரணம்.

வணக்கம் நண்பர்களே!

பயணத்திற்கு ஏற்றது மூல நட்சதிரமாகும். செம்பருத்தி + அருகம் புல்லினால் மாலை கட்டி மூல நட்சத்திரத்தில் நர்த்தன விநாயகருக்குச் சாற்றி வணங்கி பயணம் மேற்கொண்டால் வியாபாரம், திருமண விஷயங்கள், தேர்வுகள் போன்றவை காரிய சித்தியாகும்.


நன்றி நண்பர்களே!

SU. Suresh

தங்க நகைகள் வாங்கும் முன்னர்



ஓம் குருவே சரணம்.

வணக்கம் நண்பர்களே!

தங்க நகைகள் வாங்குவதற்கும், பெண் பார்க்கச் செல்வதற்கும் அஸ்த நட்சத்திரம் மிகச் சிறந்ததாகும். நகை வாங்கச் செல்கையில் தாழம்பூக்களினால் பூவின் கூரான நுனி மேலிருக்கும்படி அலங்கரித்து தாழம்பூப் பாவாடை சாற்றி அம்பாளை வணங்கிச் சென்றிட மேலும் மேலும் தங்கம் வந்து சேரும்.

தாழம்பூப் பாவாடை பூவின் கூர்நுனி கீழே வரும்படி வைத்து அம்பாளுக்குச் சாற்றினால் ஆடைகள் பெருகும். மங்களகரமான புடவை, ரவிக்கைத் துணி வந்து செந்தவாறு இல்லத்தில் மங்கலம் பொங்கும்.

நன்றி நண்பர்களே!

SU. Suresh

Friday, 9 January 2015

6ம் பாவமும் உணவு பழக்கமும்



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் அகம் சாந்த பாவங்கள்(1,3,5,7,9,11)  இயற்கை உணவினையும், எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகளையும் குறிக்கும்.

புறம் சார்ந்த பாவங்கள் (2,4,6,8,10,12)  அதிக கலோரிகளை கொண்ட உணவுகளையும், செயற்கை உணவு வகைகளையும் குறிக்கும்.

ஒருவருடைய அனைத்து உணவு பழக்க வழக்கங்களை குறிக்கக் கூடியது 6ம் பாவம் ஆகும்.

இந்த 6ம் பாவம் அகம் சார்ந்த பாவங்களை தொடர்பு கொண்டால் இயற்கை உணவுகளை அதிகம் விரும்பி உண்பவராகவும், புறம் சார்ந்த பாவங்களை தொடர்பு கொண்டால் அதிக கலோரிகளை கொண்ட அல்லது செயற்கை உணவுகளை அதிகம் விரும்பு உண்பவராகவும் இருப்பார்.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்


உடல் பருமன் யாருக்கு?




வணக்கம் நண்பர்களே!

லக்ன பாவ உபநட்சத்திரம் 4,8,12 பாவ முனைகளுக்கு உப நட்சத்திரமாகவோ, நட்சத்திரமாகவோ வரக்கூடாது.

லக்ன பாவ உபநட்சதிரம், தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 4,8,12 பாவங்களை தொடர்பு கொள்ளக் கூடாது.

4ம் பாவ உபநட்சத்திரம் 8,12 பாவ முனைகளுக்கு உப நட்சத்திரமாகவோ, நட்சத்திரமாகவோ வரக்கூடாது.

4ம் பாவ உபநட்சதிரம், தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொள்ளக் கூடாது. கிரகத்தில் குரு 4,8,12 பாவத் தொடர்பினை பெற்று இருக்க கூடாது.

மேற்கண்ட விதிகள் பொருந்தக் கூடிய ஜாதகருக்கு  சிறு வயதிலேயே உடல் பருமன் வருவதற்க்கு வாய்ப்புகள் உண்டு.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

Wednesday, 7 January 2015

கம்ப்யூட்டர் துறையில் முன்னேற



வணக்கம் நண்பர்களே!

தொழில் நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற உயர் கல்வியில் மேன்மையுற திருஓண நட்சத்திரத்தன்று உயர் கல்வியைப் பயில தொடங்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயன்ஸ் துறையில் முன்னேற விரும்புவோர் ஹஸ்தம், ஸ்வாதி நட்சத்திரங்களில் கம்ப்யூட்டர் சம்மந்தமான கல்வியை/பயிற்சியை தொடங்கினால் சிறப்பு அடையலாம்.


ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

மதுவிற்கு அடிமை யார்?


வணக்கம் நண்பர்களே!

     சார ஜோதிட முறையில் 6ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

     6ம் பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவங்களாகிய 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.

     அதே நேரத்தில் தசா பத்திகளும் 6ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளை ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை கொண்டு தசா புத்திகள் நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.

நன்றி நண்பர்களே!

Su.Suresh
9994690117



Monday, 5 January 2015

பிரச்சினை இல்லாத வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே!

சிலருக்கு பணம் இருக்கோ இல்லையோ எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கையினை வாழ்வார்கள். சிலர் மிக நன்றாக சம்பாதிப்பர்கள், ஆனால் அடிக்கடி திடீர் திடீர் என்று பிரச்சினைகள் வந்துவிடும். ஏதோ ஒரு விதத்தில் பணம், சொத்துக்கள் இழப்போ அல்லது விபத்துக்களோ நடந்தது விடும். அதாவது தீடீர் என்று விரயங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

சார ஜோதிட முறையில் 8ம் பாவம் தீடீர் யோகங்களையும் தீடீர் பிரச்சினைகளையும் கொடுக்கக் கூடியது. எனவே 8ம் பாவம் யாருக்கு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொள்கின்றதோ அவர்களுக்கு தீடீர் பிரச்சினைகள் வரும். அல்லது யாருக்கு  8ம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு தீடீர் வருமானம்,தொழில் மற்றும் அதிஷ்டம் என்று வரும்.

மேலும் 8ம் பாவம் 1,3,5,7,11 பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் இறுதிவரை வலி வேதனைகளை அனுபவிக்க மாட்டார் என்பது விதி.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்  2௦ மணி நேரத்தில் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!

SU.SURESH
9994690117


Friday, 2 January 2015

தொழில் – துணுக்குகள் 2


வணக்கம் நண்பர்களே!

லக்ன பாவம் யாருக்கு 4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தொடர்ந்து தொழில் அல்லது ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார்கள்.

பத்தாம் பாவம் யாருக்கு 8,12 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் அதிகமாக கடன் வாங்கி தொழில் செய்து சிரமப் படுவார்கள். மேலும் அவர்களுக்கு செய்கின்ற தொழிலில் அங்கீகாரம் எதுவும் கிடைக்காது.

பத்தாம் பாவம் யாருக்கு 4,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் அதிக காலம் ஒரே தொழிலை சொந்த ஊரிலேயே செய்கின்ற வாய்ப்பினை பெறுவார்கள்.

கோவையில் சார ஜோதிட வகுப்புகளுக்கும், ஜோதிட ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117

Thursday, 1 January 2015

தொழில் – துணுக்குகள் 1



வணக்கம் நண்பர்களே!

10 ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் யாருக்கு 5,11ம் பாவ தொடர்பு கொள்கிறதோ அவர்கள் தான் செய்கின்ற தொழிலை மிகுந்த ரசனையுடன் செய்வார்கள். இந்த தொடர்பு தன்னுடைய தொழிலில் அதிக உழைப்பை தராமலும் திருப்தியுடனும் வேலை செய்வதை குறிக்கும்.

10ம் பாவம் 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருப்பது அல்லது பொறுப்பில்லாமல் வேலை செய்வது போன்றவற்றை குறிக்கும். மேலும் இவர்கள் எந்த தொழில் செய்தாலும் நஷ்டமே கிடைக்கும்.

1௦ம் பாவம் 2,10 பாவ தொடர்பு கொண்டு இருந்தால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். இவர் செய்யும் தொழில் மூலம் நல்ல லாபம் வரும்.

கோவையில் சார ஜோதிட வகுப்புகளுக்கும், ஜோதிட ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH    

9994690117

புது வருட வாழ்த்துக்கள்


வணக்கம் நண்பர்களே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடம் அனைவருக்கும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றும் நல்வாழ்வு வாழ அந்த விநாயகர் அருள் செய்யட்டும்.

ஜோதிட ஆலோசனைகளுக்கும், ஜோதிட வகுப்புகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.

ONLINE லில் சார ஜோதிடம் படிக்க விரும்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

நன்றி  நண்பர்களே!

SU.SURESH
9994690117