Saturday, 24 January 2015

நல்ல உத்தியோகம் கிடைக்க



ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

கோயிலில் முதல் நாள் இறைவனுக்கு அணிவித்த பூக்களை மறுநாள் காலையில் களைவார்கள். இவற்றிக்கு நிர்மால்யப் பூக்கள் என்று பெயர். இப்பூக்களை காலில் மிதி படாமல் நதியிலோ, கடலிலோ, நீரில்லாத கிணற்றிலோ சேர்த்திட வேண்டும். அருகில் நதியோ அல்லது கடலோ இல்லாவிடில் வாரம் ஒரு முறையேனும் அவற்றை ஒன்றாகச் சேர்த்து நதி, கடல், நீரற்றுக் கிடக்கும் கின்று இருக்குமிடம் சென்று சேர்ப்பது மிகச் சிறந்த இறைத் திருப்பணி ஆகும்.

வேலையின்றி அவதியுறுவோர் பாடல் பெற்ற கோயிலையோ அல்லது தனக்கு இஷ்டமான கோயிலையோ தேர்ந்தெடுத்து நாள்தோறும் நிர்மால்யப் பூக்களை மேற்கண்ட முறையில் நீரில் சேர்ப்பது அற்புதமான இறைத் திருப்பணியாகும். இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும்.

சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம்   பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்
9994690117



No comments:

Post a Comment