Tuesday, 24 February 2015

பேச்சு திறமை வளர


வணக்கம் நண்பர்களே!

காலையிலும் இரவிலும் மட்டுமே பல் துலக்குதல் வேண்டும் என்பது இல்லை. காரியங்கள் நன்கு சுபமாய் முடிய வெளியே செல்லும் முன் வலது மேற்புறம் தொடங்கி பல் துலக்கிச் சென்றால் “வாக்கு சாதுர்யம்” ஏற்பட்டு சுபம் அடையும்.

“லலாடங்கக் கஷாயம்” எனப்படும் (ஆலங்குசிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டப்படும்) புனித நீரால் வாய் கொப்புளித்துச் சென்றிடில் வாக்குச் சுத்தி ஏற்படும். 

குழந்தைகளுக்கு இதனை பழக்கி வந்தால் அவர்கள் பொய் பேச மாட்டார்கள். வாக்கு வன்மையும் ஏற்படும். ஜோதிடர்கள் இதைச் செய்து வந்திடில் குறிப்பாக ஜோதிடம் சொல்லும் முன் செய்திடில் சொற்பலிதம் ஏற்படும். ஆல்  சமித்துகளைக் கொண்ட ஹோமம், ஜோதிடர்களுக்கு வாக்கு பலிதத்தைத் தரும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

Monday, 23 February 2015

அடுத்தவர் உதவியுடன் தொழில் செய்யும் அமைப்பு



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 1,7ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் மற்றவரையும் இணைத்துக் கொண்டு தொழில் செய்வார்கள். 

அல்லது அவரின் வேலை முடிவதற்கு அடுத்தவரின் உதவியும் தேவைப்படும். தன்னுடன் சேர்பவரை தனக்கு இணையாகவும் சம அந்தஸ்து உள்ளவராகவும் பார்த்துக் கொள்வார்.

10ம் பாவம் 1,7ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர் தன்னுடைய தொழில் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை பெறுவார்கள்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

வாழ்க வளமுடன்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117

கோவை.

Sunday, 22 February 2015

பிரச்சினைகளை மட்டும் கொடுக்கும் தசாபுத்தி


வணக்கம் நண்பர்களே!

ஜாதகருக்கு நடைபெறுகின்ற தசா புத்திகள் சரியில்லை என்றால் ஜாதகர் குடும்பம்,தொழிலில் மற்றும் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சிகளை மட்டுமே அனுபவிப்பார்.

அந்த வகையில் 8,12ம் பாவ தொடர்பு கொண்ட தசா புத்தி நடைபெறும் பொழுது ஜாதகருக்கு எல்லாவற்றிலும் பிரச்சனைகளை தரும். திடீர் திடீர் என்று விரயச் செலவுகள் வரும்.

வண்டி வாகனங்கள் பிரச்சினைகளை கொடுக்கும். விபத்து, திடீர் வாழ்ச்சி, அசிங்கம், அவமானம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட வேண்டி வரும்.

வலி மற்றும் வேதனைகளை அதிகமான இந்த 8,12ம் பாவ தொடர்பு கொண்ட தசா புத்தி கொடுக்கும்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

வாழ்க வளமுடன்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை

தொழிலில் வீழ்ச்சி செய்யும் தசாபுத்தி



வணக்கம் நண்பர்களே!

ஜாதகருக்கு நடைபெறுகின்ற தசா புத்திகள் சந்தோசம், துக்கம், பொருளாதார உயர்வு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் சார ஜோதிட முறையில் 5,9ம் பாவ தொடர்பு கொண்ட தசா புத்தி நடைபெறும் பொழுது ஜாதகருக்கு மன மகிழ்ச்சி, திருப்தி, வீட்டில் சுப நிகழ்சிகள், ஆரோக்கியம், குடும்பம் போன்றவை மிகவும் சிறப்பாக அமையும்.

ஆனால் ஜாதகர் இருப்பதை எடுத்துதான் செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழிலில்  பெரிய முன்னேற்றம் இருக்காது. அதிகமாக கேளிக்கைகளில் நாட்டம் ஏற்படும். ஊதாரித்தனமாக பணத்தினை செலவு செய்யும் நிலையில் ஜாதகர் இருப்பார்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

வாழ்க வளமுடன்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117

கோவை.

Thursday, 19 February 2015

பொருளாதாரம் 50% மற்றும் மகிழ்ச்சி 50%



வணக்கம் நண்பர்களே!

சிலர் இயற்கையாகவே பொருளாதாரம் மற்றும் மகிழ்ச்சியினை பெற்றவர்களாக இருப்பார்கள். தனக்கு கிடைத்ததை வைத்து திருப்தியுடன் குடும்பத்துடம் சந்தோசமாக இருப்பார்கள்.

அப்படி மகிழ்ச்சியையும் பொருளாதாரத்தையும் சம அளவு கொடுக்க கூடிய தொடர்பு சார ஜோதிட முறையில் 1,3,7,11 என்று கூறுவோம். எனவே ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1,3,7,11 பாவத்தொடர்பினை கொள்ளும் பொழுது ஆரோக்கியம், குடும்ப உறவு சிறப்படையும். தன்னை சார்ந்த அனைவரையும் அனுசரித்து அரவணைத்துக் கொள்ளக் கூடிய மனதினை கொடுக்கும்.

இந்த பிறப்பிற்கு தேவையான அனைத்தையும் சம்பாதித்து (பணம், நல்ல மனம் மற்றும் நல்ல நண்பர்கள் ) திருப்தியான, மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்வார்கள். அதாவது போதும் என்ற மனதுடன் வாழும் வாழ்க்கையினை 1,3,7,11  பாவத் தொடர்புகளை கொண்ட இந்த தசா வழக்கும்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 


வாழ்க வளமுடன்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை.

பொருளாதார உயர்வு யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

இந்த பிறப்பில் அனுபவிக்கும் நன்மை தீமைகள் முன்ஜென்ப வினையின் படியே அமைகின்றன. நாம் பணத்தினை கற்பனையிலோ அல்லது உடல் உழைப்பினாலோ பெற்றுவிடலாம் என்று ஓடுகின்றோம். இதனால் நாம் நம்முடைய தாய், தந்தை மற்றும் நம்மை சார்ந்தவர்களை மறந்துவிட்டு ஓட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இதனால் நாம் சேர்த்துக் கொள்ளவது பாவத்தை தானே தவிர பணத்தினை அல்ல.

சிலருக்கு பணத்தினை தேடி அலையை வேண்டி இல்லாமல் நல்ல படிப்பு, நல்ல வேலை அல்லது தொழில் இயற்கையாகவே அமைந்து விடும். இதுவும் முன்ஜென்ம பலனே என்றால் அது மிகை அல்ல.

ஒருவருக்கு பொருளாதாரத்தில் சிறப்பான நிலையினை தரக்கூடிய கிரகங்கள் எவை என்பதனை சார ஜோதிட முறையில் எளிதாக கண்டு அறியலாம்.

ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்வது பொருளாதார நோக்கில் ஒரு சிறப்பான அமைப்பினை தரும். இந்த தொடர்பினை கொண்ட தசா நடந்தால் கிடுகிடுவென பொருளாதாரம் உயரும். ஜாதகர் பார்க்கின்ற வேலையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்ப்படும்.

ஜாதகர் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் வெற்றியும், பணத்தினையும் மிக எளிதாக பெறுவர். இந்த 2,4,6,10 தொடர்பு பாசத்திற்கு அடிமையாகாமல் பணத்திற்கு அடிமையாகக் கூடிய அமைப்பினை தரும்.  எனவே இந்த தொடர்புபானது மனமகிழ்ச்சி, திருப்தி, ஆரோக்கியம் மற்றம் குடும்ப உறவுகள் அனைத்திலும் மத்திமமான வெற்றியினை கொடுக்கும்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 

நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை 

Saturday, 14 February 2015

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 14


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 12ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு சாதகமான பலனை தரும். ஒரு குறிப்பிட்ட பாவத்தில் இருந்து வரும் அதன் மூன்றாம் பாவம் கேள்விக்குரிய பாவத்தினை பல மடங்கு வளர்த்து விடும்.

10ம் பாவத்தின் 12ம் பாவத் தொடபு ஜாதகர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபடுவதை குறிக்கும். எனவே ஜாதகர் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டி இருப்பதனால் உடல் சோர்வு மற்றும் மனச் சோர்வு என்பது கண்டிப்பாக இருக்கும்.

12ம் பாவ காரகத்துவத்தில் விரயம் மற்றும் இழப்பு என்பவையும் உள்ளன. எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொழிலை கொடுத்தாலும் விரயம் மற்றும் இழப்புகளை ஜாதகர் தான் செய்யும் தொழிலில் சந்திக்க வேண்டி வரும். 

இரண்டு தொழிலில் ஈடுபடும் ஜாதகருக்கு 12ம் பாவமும் வலுவாக 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் இரண்டாவது தொழில் மூலம் நல்ல வருமானம் உண்டு.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும். 


நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117

கோவை

Friday, 13 February 2015

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 13


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 11ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு பாதகமான பலனை தராது. இந்த தொடர்பு 10 பாவத்திற்கு இரண்டாம் பாவமாக வரும். மேலும் 2 மற்றும் 6ம் பாவங்களுக்கும் இந்த 11ம் பாவம் என்பது ஒரு நடுநிலையான அமைப்பினை தரும். 

10ம் பாவத்தின் 11ம் பாவத் தொடபு ஜாதகருக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவற்றை கிடைக்கச் செய்யும். பொதுவாகவே எந்த பாவம் 11 பாவத்தினை தொடர்பு கொள்ளுகின்றதோ அந்த பாவக ரீதியாக ஜாதகர் திருப்தியினை அனுபவிப்பார்.

எனவே இந்த தொடர்பு ஜாதகரை திருப்தி அடையச் செய்யும். மேலும் ஜாதகர் தன்னுடைய தொழிலில் தான் அடைந்த வளர்ச்சியினை கண்டு திருப்தி அடைந்து அந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டார்.

அதாவது 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சதிரத்தின் மூலம் 11ம் பாவம் தொடர்பு கொண்ட நபர்கள் தன்னுடைய தொழிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்க்க விரும்ப மாட்டார்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  


நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117

கோவை

Tuesday, 10 February 2015

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 12



வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 10ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு எல்லா வகையிலும் வெற்றியினை தரக்கூடிய அமைப்பினை தரும்.

10ம் பாவத்தின் 10ம் பாவத் தொடர்பு என்பது 10ம் பாவத்திற்கு 1ம் பாவமாக வரும். அதனால் இவர்கள் தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு வேலையையும் மிக மிக கவனமாக செய்வார்கள். மேலும் இவர்கள் அதிக அதிகாரம் மற்றும் தலைமைப் பொறுப்புள்ள பணிகளிலேயே இருப்பார்கள்.

ஜாதகருக்கு கீழ் அதிக நபர்கள் இவரின் பேச்சை கேட்டு வேலை செய்வார்கள். உதாரணமாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் ஆணையர் போன்ற பதவிகளை இந்த தொடர்பு கொடுக்கும்.

சுருக்கமாக கூறவேண்டுமானால் 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சதிரத்தின் மூலம் 10ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் அதில் முதல் நபராக செயல்படும் வாய்ப்புகளை பெறுவார்கள். 

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.  


நன்றி நண்பர்களே!
Su.Suresh
9994690117

கோவை

Sunday, 8 February 2015

மேற்குத் திக்கு


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

மேற்குத் திக்கில் வாயு சம்மந்தமான காரியங்களைச் செய்யலாம். மேற்குத் திக்குகளில் வரும் சூரிய ஒளிக்கு “அருணக் கூட்டு” என்ற சக்தி உண்டு.

இந்த ஒளியில் நீரில் நின்று மந்திர உரு ஏற்றுதல் சக்தியை தரும். இவர்கள் வாயால் மந்திரித்து பயந்த குழந்தைகள், பெரியவர்கள் மீது ஊதினால் துன்பங்கள் விலகும்.

மிதுனம், துலாம், கும்பம் ராசிக்காரர்கல் “அம்புலி அகவு” என்ற தோலை உடயவர்கள். இவர்கள் மேற்குத் திக்கு சூரிய ஒளியால் பல நன்மைகளை பெறுவர். இவர்கள் மாலைக் கதிரவனின் ஒளியை நிரம்பப் பெற்றால் பல காரியங்களைச் சாதிக்கலாம். 

நன்றி நண்பர்களே! 

SU.சுரேஷ்
கோவை

9994690117


Saturday, 7 February 2015

கிழக்குத் திக்கு


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

     அக்னி சம்மந்தமான காரியங்களைச் செய்யலாம். கிழக்குத் திக்குகளில் வரும் சூரிய ஒளிக்கு “தினவுப் பறை” என்ற சக்தி உண்டு. இந்த ஒளியால் தியானம் கைகூடும். ஜபங்கள் உரு வேகமாய் ஏறும். 

மேலும் ஒவ்வொருவர் உடல் மீதுள்ள தோல் ஒவ்வொரு விதமான நிறங்களை கிரகிக்கும் சக்தி பெற்றது. ஆகவே, மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் “தும்பத் துருவு” என்ற தோலை உடையவர்கலாதளால் இந்த கிழக்குத் திக்கு சூரிய ஒளியால் பல நன்மைகளைப் பெறுவர்.  

இவர்கள் காலைக் கதிரவனின் ஒளியை நிரம்பப் பெற்றால் பல காரிய சாதனைகளைச் செய்வர். இன்னும் பல இரகசியங்கள் உண்டு. குரு மூலமாய் அறிதல் நலம்.

நன்றி நண்பர்களே!   

SU.சுரேஷ்
கோவை
9994690117

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 11




வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 9ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகரின் தொழிலுக்கு பாதகம் செய்யக் கூடிய அமைப்பினை தரும்.

சார ஜோதிட முறையில் ஒரு பாவத்தின் 12ம் பாவத்தொடர்பு அந்த பாவத்தின் செயல்களை உடனே தடுத்து விடும். மேலும் 10 பாவத்தின் காரகங்களாகிய கடமை, பொறுப்பு போன்றவை இந்த 9ம் பாவத் தொடர்பின் மூலம் செயல் இழந்து விடும்.

இந்த 9ம் பாவத் தொடர்பின் மூலம் ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் நிலையாக செய்ய மாட்டார். எந்த தொழிலை அதனில் இருந்து உடனே வெளியேறி விடுவார்கள் அல்லது மூடி விடுவார்கள்.

10ம் பாவம் 9ம் பாவத்தினை தொடர்பு கொண்ட ஜாதகருக்கு தொழில் ரீதியாக வெற்றிபெற சில விதிகள் உள்ளன. அவை.

1.       லக்ன பாவ உப நட்சத்திரம் 4,10 பாவத் தொடர்பினை பெறுவது.
2.       9ம் பாவ உப நட்சத்திரம் 2,10 பாவத் தொடர்பினை பெறுவது
3.       20 வயது முதல் 60 வயதுவரை 2,4,6,10 பாவ சம்மந்தமான தசா நடப்பது 9ம் பாவத் தொடர்பின் கெடுபலன்களை குறைக்கும்.

ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.

 நன்றி நண்பர்களே!

Su.Suresh
9994690117

கோவை