வணக்கம் நண்பர்களே!
இந்த பிறப்பில் அனுபவிக்கும் நன்மை தீமைகள் முன்ஜென்ப வினையின் படியே
அமைகின்றன. நாம் பணத்தினை கற்பனையிலோ அல்லது உடல் உழைப்பினாலோ பெற்றுவிடலாம் என்று
ஓடுகின்றோம். இதனால் நாம் நம்முடைய தாய், தந்தை மற்றும் நம்மை சார்ந்தவர்களை
மறந்துவிட்டு ஓட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இதனால் நாம் சேர்த்துக்
கொள்ளவது பாவத்தை தானே தவிர பணத்தினை அல்ல.
சிலருக்கு பணத்தினை தேடி அலையை வேண்டி இல்லாமல் நல்ல படிப்பு, நல்ல
வேலை அல்லது தொழில் இயற்கையாகவே அமைந்து விடும். இதுவும் முன்ஜென்ம பலனே என்றால்
அது மிகை அல்ல.
ஒருவருக்கு பொருளாதாரத்தில் சிறப்பான நிலையினை தரக்கூடிய கிரகங்கள்
எவை என்பதனை சார ஜோதிட முறையில் எளிதாக கண்டு அறியலாம்.
ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10
பாவங்களை தொடர்பு கொள்வது பொருளாதார நோக்கில் ஒரு சிறப்பான அமைப்பினை
தரும். இந்த தொடர்பினை கொண்ட தசா நடந்தால் கிடுகிடுவென பொருளாதாரம் உயரும். ஜாதகர்
பார்க்கின்ற வேலையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்ப்படும்.
ஜாதகர் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் வெற்றியும், பணத்தினையும் மிக
எளிதாக பெறுவர். இந்த 2,4,6,10 தொடர்பு பாசத்திற்கு அடிமையாகாமல் பணத்திற்கு அடிமையாகக் கூடிய
அமைப்பினை தரும். எனவே இந்த தொடர்புபானது
மனமகிழ்ச்சி, திருப்தி, ஆரோக்கியம் மற்றம் குடும்ப உறவுகள் அனைத்திலும் மத்திமமான
வெற்றியினை கொடுக்கும்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி
வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை
I want to contact you. ....
ReplyDelete