வணக்கம் நண்பர்களே!
காலையிலும் இரவிலும் மட்டுமே பல் துலக்குதல்
வேண்டும் என்பது இல்லை. காரியங்கள் நன்கு சுபமாய் முடிய வெளியே செல்லும் முன் வலது
மேற்புறம் தொடங்கி பல் துலக்கிச் சென்றால் “வாக்கு சாதுர்யம்” ஏற்பட்டு சுபம்
அடையும்.
“லலாடங்கக் கஷாயம்” எனப்படும் (ஆலங்குசிகளை
வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டப்படும்) புனித நீரால் வாய் கொப்புளித்துச்
சென்றிடில் வாக்குச் சுத்தி ஏற்படும்.
குழந்தைகளுக்கு இதனை பழக்கி வந்தால் அவர்கள்
பொய் பேச மாட்டார்கள். வாக்கு வன்மையும் ஏற்படும். ஜோதிடர்கள் இதைச் செய்து
வந்திடில் குறிப்பாக ஜோதிடம் சொல்லும் முன் செய்திடில் சொற்பலிதம் ஏற்படும். ஆல் சமித்துகளைக் கொண்ட ஹோமம், ஜோதிடர்களுக்கு
வாக்கு பலிதத்தைத் தரும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment