Saturday, 27 September 2014

சார ஜோதிட வகுப்புகள்


நண்பர்களே! உங்களுக்கு ஜோதிடம் கற்று கொள்ள விருப்பமா?. KB (சார ஜோதிடம்) ஜோதிட முறையில் பலன்கள் சொல்ல கற்றுத்தரப்படும். ஜோதிடம் ஆர்வம் இருந்தால் போதும். இரண்டே வாரங்களில் நீங்களும் பலன்கள் கூறலாம்.   

Thanks,
Su. Suresh
கோவை
9952127002

Friday, 26 September 2014

குழந்தை பாக்கியம் யாருக்கும் (விதிப்படி) மறுக்கப்படுகிறது?


5ம் பாவம் 2,4,6,8ம் பாவ தொடர்பு கொண்டு இருந்தால் குழந்தை பாக்கிய கொடுப்பினை (விதிப்படி) மறுக்கப் பட்டுள்ளது.

Saturday, 20 September 2014

உப நட்சத்திரம் - பாகம் 11


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 10


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 9


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 8



நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 7


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 6


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 5



நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 4


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 3



நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 2


நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

உப நட்சத்திரம் - பாகம் 1



வணக்கம் நண்பர்களே!

உப நட்சத்திரம் தொடர்பான திரு தேவராஜ் அவர்களின் கட்டுரைகளை இமேஜ் ஆக கொடுத்து உள்ளேன். படித்து புரிந்து கொள்ளவும்.

நன்றி
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com


Friday, 19 September 2014

தீபத்தை குளிர வைக்கும் முறை


வணக்கம் நண்பர்களே!

பொதுவாக மக்கள் தீபம் ஏற்றினால், எண்ணை முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டுவிடுகின்றனர். இது தவறு. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தீபத்தை குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணையில்  அமிழ்ந்திருக்கும் நுனியை) “ஓம் சாந்த ஸ்வரூபினே நம:” என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணையில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

நன்றி நண்பர்களே!


Su.Suresh

எரியும் விளக்கை தூண்டும் முறை


வணக்கம் நண்பர்களே!

விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்திற்கு உரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் வீண் சாபங்களும், தோஷங்களும் ஏற்ப்படுகின்றன. இதற்குப் பதிலாக, திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.

நேரம் ஆக ஆக விளக்கின் திரி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.

நன்றி நண்பர்களே!


Su.Suresh

2ம் பாவம் – பேச்சு



வணக்கம் நண்பர்களே!

ஒருவருடைய பேச்சு என்பது 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் ஜாதகருக்கு சாதக பாதகத்தை அளிக்கிறது. பொதுவாக பேச்சு என்பது அடுத்தவர்களை மகிழ்விக்கும்படியாகவும், அல்லது உள்ளதை உள்ளபடி நடந்த, நடக்க போகின்ற விசயங்களை சொல்வதாகவும் இருக்கும்.

2ம் பாவம் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் அடுத்தவர்களை மகிழ்விக்கும் படியாக பேசும் திறமை பெற்று இருப்பார். 3,7,11 பாவங்கள் பொருளாதார விசயங்களில் 2ம் பாவத்திற்கு மத்திமமான பாவங்கள் ஆகும். எனவே இந்த 3,7,11 பாவத் தொடர்புகளின் மூலமாக ஜாதகருக்கு வருமானமும் உண்டு. எனவே பேச்சாளர்களுக்கும், டிவியில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கும் 2ம் பாவம் 3,7,11 பாவதொடர்பு கொள்வது சிறப்பு.

ஆனால் மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறுகின்ற மக்கள் தொடர்பு அதிகாரி, செய்தி வாசிப்பவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு 2 ம் பாவம் 2,4,6,10 தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பு. இந்த தொடர்பினால் ஜாதகருக்கு  அடுத்தவரை மகிழ்விக்கும்படியாக, கவர்ச்சியாக பேச முடியாது.

மேலும் 9ம் பாவமும் 3,7,11 தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பு. கிரகங்களில் புதன்(நியாபக சக்தி,புள்ளி விபரம்),சுக்கிரன்(கவர்ச்சி) நல்ல முறையில் 1,3,7,9,11 பாவ தொடர்புகள் பெற்று இருப்பது மேலும் சிறப்பு.   

நன்றி நண்பர்களே!

Su.Suresh
astrovaasan@gmail.com

Wednesday, 17 September 2014

பஞ்ச தீப எண்ணை


வணக்கம் நண்பர்களே!

தேங்காய் எண்ணை, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் மற்றும் பசுநெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணைய் எனப்படும். இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் துன்புருவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண்கண்ட மருந்தாகும்.

தேவி உபாசகர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாம் தேவியை மகிழ்விக்க பஞ்சமித் திதியில், பஞ்ச தீப எண்ணை ஊற்றி பஞ்ச தீபம் (5 சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள் கிட்டும்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்


Sunday, 14 September 2014

அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் பெற


வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொருவரும் தத்தம் இல்லங்களில் மாலை வேளைகளில் பின்புற வாயிலை மூடி வைத்து, பின்னர், முன்புற வாயிலில் ஒரு சுமங்கலியின் முன்னிலையில்  இரண்டு எண்ணை விளக்குகளை ஏற்றி வைத்து உட்சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும் (Flat களில் குடியிருப்போர் பின்புறம் உள்ள சிறு ஜன்னலையவது மூடிவிட வேண்டும்.)

இவ்வாறு தினந்தோறும் தொடர்ந்து செய்து வருவதால், தைர்ய லக்ஷ்மி நமது இல்லங்களில் வாசம் செய்ய நல்வழி வகுப்பதுடன் திருட்டைப் பற்றிய பயமும், பீதியும் இறையருளால் குறையும். மேலும் தைர்ய லக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில்தான் அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் கடாட்சம் இயல்பாவகவே வந்து அமைகிறது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

Saturday, 13 September 2014

குழந்தைகளுக்கு தூளி கட்டும் முறை


வணக்கம் நண்பர்களே!

குழந்தைகளுக்கு தூளி கட்ட மர உத்திரம்,மரதொட்டில் போன்ற மரப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இரும்பு வளையங்கள், ஸ்ப்ரிங், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

இரும்பில் உள்ள “பசும்துளிர் மின்சக்தி” என்ற கெடுதலான மின்சக்தி குழந்தைகளின் மனோதிடத்தைப் பாதித்து பயம்/பீதியில் கதறுதல், வயிறு மந்தம், உடல் உஷ்ணத்தையும் உண்டாகும். இரும்பு வளையங்களில் மரக்கட்டையச் செருகி அதில் தூளி கட்டலாம். பழையதாகி வந்த மரத்தொட்டில்களே உத்தமமானதாகும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh


Friday, 12 September 2014

எழுத்து துறையில் சிறப்படைய ஜாதக அமைப்பு


எழுத்து துறை பற்றி ஆராயும் பொழுது 3ம் பாவத்தை பார்க்க வேண்டும். 3ம் பாவம் எழுத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்க கூடியது. 3ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் தன் பாவத்திற்கு சாதகமாகவும், லக்ன பாவத்திற்கு 8 மற்றும் 12 தொடர்பு இல்லாமல் இருப்பது சிறப்பு.
மேலும் புதன் எழுத்து தகவல் தொடர்புகளுக்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும். எனவே புதனும் 3ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொள்வது சிறப்பு.

மூன்றாம் பாவம் வலுத்து இருந்தால் எழுத்து துறையில் ஜாதகர் ஈடுபாடுடனும், புகழுடனும் இருப்பார். இல்லாவிட்டால் அவருடைய தனித்திறமையை வெளிப்படுத்த முடியாமலும், ஆர்வம் குறைவாகவும் இருப்பார்.

எழுத்து துறையில் நல்ல பெயர் எடுத்து, புகழுடன் ஒரு அளவிற்கு வருமானத்துடன் இருக்க 3ம் பாவம் 3,7,11 பாவ தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பு.

3ம் பாவம் 1,5,9 பாவ தொடர்பு கொண்டு இருந்தால் வருமானம் வராது. 3ம் பாவத்தின் 1,5,9 பாவ தொடர்பு 2ம் பாவத்திற்கு 4,8,12 ஆக வரும். எனவே ஜாதகர் வருமானத்தை பற்றி கவலை படமாட்டார் அல்லது வருமானம் எழுத்து துறையில் வராது. ஆனால் புகழுடன் இருப்பார்.

3ம் பாவம் 2,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் எழுத்து துறையில் ஆர்வம் இருக்காது அல்லது ஜாதகர் அதில் அவருடைய தனித்திறமையை காட்ட முடியாது. ஏனென்றால் 3ம் பாவத்தின் 2,6,10 பாவ தொடர்பு என்பது 3ம் பாவத்திற்கு 4,8,12 பாவமாக வரும்.

3ம் பாவம் 4,8,12 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் இது 3ம் பாவத்திற்கு ஒரு மத்திமமான அமைப்பு. இது ஜாதகருக்கு ஒரு அளவிற்கு எழுத்து துறையில் சாதகமான அமைப்பினை தரும் எழுத்து துறையில். இருந்தாலும் இந்த தொடர்பு லக்ன பாவத்திற்கு சாதகம் இல்லாமல் இருப்பதால் எழுத்து துறை மூலம் எதிர்ப்பு,பயம், மன ரீதியான பிரச்சினைகளை ஜாதகர் சந்திப்பார்.

நன்றி நண்பர்களே!

Su. சுரேஷ்
astrovaasan@gmail.com

காகத்திற்கு உணவிடுவது ஏன்?


வணக்கம் நண்பர்களே!

மனிதன் தான் உணவேற்கும் முன் காகத்திற்கு உணவிடுதல் வேண்டும். ஏனெனில், நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருகின்றனர். அவர்களுடைய ஆசியால்தான் நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ முடிகின்றது. ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவிடுவது அவசியம். மேலும் காகத்திற்கு உணவிடும் நற்பழக்கத்தால் கணவன் மனைவியரிடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ காகத்தை வாகனமான உடைய ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவருளால் வழி ஏற்படுகின்றது. ‘வைகாசி பூரண மகரிஷி’ என்பவரே எத்தனையோ கோடி சதுர்யுகங்கள் தவமிருந்து ஸ்ரீசனீஸ்வர பகவானின் காக்கை வாகனமாகும் பாக்கியத்தைப் பெற்றார்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

Wednesday, 10 September 2014

தான எண்ணத்துடன் உண்க


வணக்கம் நண்பர்களே!

சாப்பிடுவதற்கு முன் இழையின் ஒரு ஓரத்தில் சிறிதளவு உணவை எடுத்து வைத்து விட்டுத்தான் உண்ண  வேண்டும். ஏனென்றால், உண்ட பின் நாம் எறிந்து விடும் எச்சில் இழைகளை நாடி நாய், பசு, காகம் போன்ற பல ஜீவன்கள் வருகின்றன. அவை நம் இலையைப் பார்த்து 'உணவில்லியே' என ஏமாந்து திரும்பிச் சென்றால் நமக்கும் வாழ்வில் உணவு கிடைக்காமல் ஏமாறும் நிலை ஏற்ப்படும் .

எனவே சாப்பிடும் முன் சிறிதளவு உணவினைப் பிற ஜீவராசிகளுக்காக எடுத்து வைப்பது ஒரு நல்ல பழக்கம். இலை  மட்டுமின்றி தட்டு, டிபன் கேரியரில் உணவு உண்ணுவோரும் வாழ்நாள் முழுவதும் எளிமையான இப்பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

செய்வோமா நண்பர்களே?

நன்றி நண்பர்களே!

Su.Suresh

எறும்புகளுக்கு உணவு இடுவது ஏன்?


வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு எறும்பும் தனக்கு உணவு இட்டவர்களுக்கு ஒரு நிமிடம் தவம் செய்கிறது. குறிப்பாக கோயில், கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில் வாழ்கின்ற எறும்புகள் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களை நம்பியே வாழ்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் தினந்தோறும் கோயிலுக்கு செல்லும் போது சிறிதளவு ரவை,கோதுமை/அரிசி குருணையுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து அங்குள்ள எறும்புகளுக்கு உணவிட வேண்டும்.

அன்றைய பொழுதிற்கு உணவு கிடைக்கப் பெற்ற எறும்புகள் மனநிறைவுடன் நமக்காக ஒரு நிமிடம் தவம் செய்து அந்த தவப் பலனை நமக்கு அளிக்கின்றன. அதனால் நம் குடும்பத்தில் என்றுமே உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. ஒற்றுமை அதிகரித்து அமைதி நிலவும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த தானியம் உண்டு. குறிப்பிட்ட தெய்வத்தின் அருளைப் பெற அதற்க்குரித்தான தானிய ரவைகளையே கோயில் எறும்புகளுக்கு உணவாக இட வேண்டும்.

அன்னபூரணி – அரிசி
முருகன் – கேழ்வரகு
பிரகஸ்பதி – கோதுமை
சந்திரன் – உளுந்து
சூரியன் – கடலைப் பருப்பு
ராகு – கம்பு
புதன் – சோளம்
செவ்வாய் – துவரை
குரு – கடலை
சனி – எள்   

நன்றி நண்பர்களே!
சுரேஷ் சுந்தரராஜன்  

astrovaasan@gmail.com

Thursday, 4 September 2014

நீங்கள் யார்?


நம் நண்பர்களில் பலர் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம். ஒவ்வொருவரின் மனதிலும் புதிதாக ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஒவ்வொரு நாளும் கனவுகளுடன் கடத்தி வருவார்கள்.
ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை என்று ஒன்றை கொடுத்து இருப்பார். அதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நம்முடைய கர்மா நாம் அதனை காண விடாது.

நீங்கள் என்றாவது ஒருநாள் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களிடம் என்ன திறமை இருக்கிறது இன்று யோசித்து பார்த்து இருப்போமா?

படித்தோம், வேலை கிடைத்தது. EMIல் அனைத்தும் கிடைத்தது. பர்சனல் லோன், வீட்டு கடன் கிடைத்தது. அதற்க்கு உண்டான பணத்தை கொடுக்க வேலை பார்க்கிறோம். அவ்வளவு தான். 

அதை தாண்டி????. 

நாம் பார்க்கும் வேலை எத்தனை நாள்??? 

அது இல்லை என்றால்? அடுத்தது என்ன???

யோசியுங்கள் நண்பர்களே!.

கண்டிப்பாக விடை கிடைக்கும். விடை கிடைத்தால் அதனை அடைய என்ன செய்ய போகிறீர்கள்?


நன்றி நண்பர்களே!

SU.Suresh
9952127002