எழுத்து துறை பற்றி ஆராயும் பொழுது 3ம் பாவத்தை
பார்க்க வேண்டும். 3ம் பாவம் எழுத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்க கூடியது. 3ம் பாவம் தான்
நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் தன் பாவத்திற்கு சாதகமாகவும், லக்ன
பாவத்திற்கு 8 மற்றும் 12 தொடர்பு இல்லாமல் இருப்பது சிறப்பு.
மேலும் புதன் எழுத்து தகவல் தொடர்புகளுக்கு
காரகம் வகிக்கும் கிரகம் ஆகும். எனவே புதனும் 3ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன்
தொடர்பு கொள்வது சிறப்பு.
மூன்றாம் பாவம் வலுத்து இருந்தால் எழுத்து துறையில்
ஜாதகர் ஈடுபாடுடனும், புகழுடனும் இருப்பார். இல்லாவிட்டால் அவருடைய தனித்திறமையை வெளிப்படுத்த
முடியாமலும், ஆர்வம் குறைவாகவும் இருப்பார்.
எழுத்து துறையில் நல்ல பெயர் எடுத்து, புகழுடன்
ஒரு அளவிற்கு வருமானத்துடன் இருக்க 3ம் பாவம் 3,7,11 பாவ தொடர்பு கொண்டு இருப்பது
சிறப்பு.
3ம் பாவம் 1,5,9 பாவ தொடர்பு கொண்டு இருந்தால்
வருமானம் வராது. 3ம் பாவத்தின் 1,5,9 பாவ தொடர்பு 2ம் பாவத்திற்கு 4,8,12 ஆக வரும். எனவே
ஜாதகர் வருமானத்தை பற்றி கவலை படமாட்டார் அல்லது வருமானம் எழுத்து துறையில் வராது.
ஆனால் புகழுடன் இருப்பார்.
3ம் பாவம் 2,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு
இருந்தால் எழுத்து துறையில் ஆர்வம் இருக்காது அல்லது ஜாதகர் அதில் அவருடைய
தனித்திறமையை காட்ட முடியாது. ஏனென்றால் 3ம் பாவத்தின் 2,6,10 பாவ தொடர்பு என்பது
3ம் பாவத்திற்கு 4,8,12 பாவமாக வரும்.
3ம் பாவம் 4,8,12 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் இது 3ம் பாவத்திற்கு
ஒரு மத்திமமான அமைப்பு. இது ஜாதகருக்கு ஒரு அளவிற்கு எழுத்து துறையில் சாதகமான அமைப்பினை
தரும் எழுத்து துறையில். இருந்தாலும் இந்த தொடர்பு லக்ன பாவத்திற்கு சாதகம்
இல்லாமல் இருப்பதால் எழுத்து துறை மூலம் எதிர்ப்பு,பயம், மன ரீதியான பிரச்சினைகளை
ஜாதகர் சந்திப்பார்.
நன்றி நண்பர்களே!
Su. சுரேஷ்
astrovaasan@gmail.com
அருமை
ReplyDeleteThanks
Delete