Friday, 12 September 2014

காகத்திற்கு உணவிடுவது ஏன்?


வணக்கம் நண்பர்களே!

மனிதன் தான் உணவேற்கும் முன் காகத்திற்கு உணவிடுதல் வேண்டும். ஏனெனில், நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருகின்றனர். அவர்களுடைய ஆசியால்தான் நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ முடிகின்றது. ஆகவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவிடுவது அவசியம். மேலும் காகத்திற்கு உணவிடும் நற்பழக்கத்தால் கணவன் மனைவியரிடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ காகத்தை வாகனமான உடைய ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவருளால் வழி ஏற்படுகின்றது. ‘வைகாசி பூரண மகரிஷி’ என்பவரே எத்தனையோ கோடி சதுர்யுகங்கள் தவமிருந்து ஸ்ரீசனீஸ்வர பகவானின் காக்கை வாகனமாகும் பாக்கியத்தைப் பெற்றார்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

No comments:

Post a Comment