Friday, 25 December 2015

மனைவி அமையும் விதம் – சுக்கிரன்


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரனாக     அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

வயதில் குறைந்தவர் 
அழகாக இருப்பார்.
அதிக மேக்கப் போடுவார்.
கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
மனமகிழ்ச்சி மற்றும் சந்தோசம் உண்டு.

ஜாதகரின் திருமண வாழ்க்கை கவர்ச்சி நிறைந்தது !!!

நிறைவுற்றது......... 

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – கேது


     
வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் கேதுவாக     அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

மனைவி குள்ளமாக இருப்பார்.
தனிமை விரும்பி.
இல்லற நாட்டம் இல்லாதவர் 
உடல் உறுப்பில் வித்தியாசமன தோற்றங்கள் இருக்கும்.
மனைவி ஆன்மீகவாதி 

ஜாதகரின் திருமண வாழ்க்கை சுமார் ரகம் !!!

அடுத்து சுக்கிரன் ......... 

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – புதன்




வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் புதனாக அமைந்தால் ஜாதகரின் மனைவி,

வயதில் குறைந்தவர்
புத்திசாலி, சுறுசுறுப்பானவர்
சுயநலம் அதிகம் இருக்கும்.
மாமன் மகளாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஜாதகரின் திருமண வாழ்க்கை அதிஷ்டம் நிறைந்தது !!!

அடுத்து சுக்கிரன் ........

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – சனி


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சனியாக    அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

சற்று பயந்த சுபாபம் உடையவர்.

அமைதி, நிதானம் மற்றும் மந்த புத்தியுடன்.

எதையும் திருப்பி திருப்பி சொன்னால் தான் புரிந்து 
கொள்ளக் கூடியவர்.

வயதான தோற்றம் உடையவர்.

ஜாதகரின் திருமண வாழ்க்கை சுமார் ரகம் !!!

அடுத்து புதன் ........

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

Wednesday, 23 December 2015

ஞாபக சக்தி பெற





வணக்கம் நண்பர்களே!

சூரபதுமனுடன் போர் புரிந்து, அவனை வென்றவுடன் ஸ்ரீமுருகப் பெருமான் வந்து அம்மை, அப்பனை வழிபட்ட திருத்தலமே சென்னை – திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயமாகும்   

ஸ்ரீமுருகனே நேரில் வந்து வழிபட்ட தலமாகையால் ஞானமயப் பிரகாசம் நிறைந்து விளங்குகின்றது.

இங்கு பிள்ளைகள் திங்கள் கிழமை,பிரதோஷம், மாத சிவராத்திரி ஆகிய நாட்களில் காலில் திருவெண்டயம் அணிந்து அடிப் பிரதிட்சிணம் செய்து வந்தால், பாத ரேகைகள் மூலமாக வேத சக்திகள் உடல் நாளங்களில் பரவி, நல்ல ஞாபக சக்தி ஏற்படும்.      

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

வேப்பமரத்தடி விநாயகர்





வணக்கம் நண்பர்களே!

வேப்ப மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பஞ்ச தீப என்னை எனப்படும் ஐந்து வித எண்ணை கொண்டு (தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய்,
இலுப்பெண்ணை, விளக்கெண்ணை)  தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்  மனதிற்கு ஏற்ற வரன் அமையும். ஏற்றுமது, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு அடிமையாய் செயல்படும் நிலை அகலும். குடும்பத்தில் மைத்துனி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் தீரும்.

பாகற்காய் கலந்த உணவை தானம் செய்தல் உத்தம பலன்களைப் பெற்றுத் தரும். கிழக்கு நோக்கிய வேப்பமரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

மனைவி அமையும் விதம் – குரு


   
வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் குருவாக    அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

மனைவி தெய்வ பக்தி, உயர்ந்த உள்ளம் உடையவர். 

சுறுசுறுப்பானவர் சற்று குண்டாக இருப்பார்.

சத்தமாக பேச மாட்டார்கள்.

ஜாதகரின் திருமண வாழ்க்கை அருமையானது தான் !!!

அடுத்து சனி ........

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – ராகு


   
வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் ராகுவாக    அமைந்தால் ஜாதகரின் மனைவி, 
அந்நிய இனம் அல்லது மதத்தினை சார்ந்தவராக இருப்பார். 

இரண்டாவது திருமணமாக வாய்ப்பு உண்டு. 
திருமணத்தில் வரம்பு மீறல் இருக்க வாய்ப்பு உண்டு. 
கள்ள தொடர்பு, விவாகரத்து ஆனவரை திருமணம் செய்தல் போன்றவை உண்டு.

ஜாதகரின் திருமண வாழ்க்கை சற்று பிரச்சினைக்கு 
உரியது தான் !!!

அடுத்து குரு  ........

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – செவ்வாய்



வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் செவ்வாயாக   அமைந்தால் ஜாதகரின் மனைவி,

முரட்டு தனம் அதிகம் இருக்கும்.

முன் கோபம் அவருக்கு முன்பு நிற்கும்.

பாசத்த கூட முரட்டுத் தனமாகத் தான் காட்டுவார்கள்.

தாம்பத்திய வாழ்வின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.

வீட்டில் உள்ள கடினமான வேலைகளை அவர்களே செய்வார்கள்.

தேவைப் படும் பொது உடல் பலத்தினை கட்ட தவற மாட்டார்.

கண்டிப்பாக ஜாதகரின்(ஆணின்) உடல் அமைப்பு

எவ்வளவு அடித்தாலும் தாங்கக் கூடியவராகத் தான் கடவுள் படைத்து இருப்பார்

ஜாதகரின் திருமண வாழ்க்கை சற்று அடிவாங்கும் ரகம். !!!

அடுத்து புதன் ........

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – சந்திரன்


வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவருக்கும் மனைவி எப்படி அமைவார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதன் படி, 

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சந்திரனாக  அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

மனைவிக்கு குணம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். 

குடும்பத்தினை நிர்வாகம் செய்யக் கூடிய தன்மை இருக்காது. 

உடல் அமைப்பு மற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

ஜாதகரின் திருமண வாழ்க்கை சுமார் ரகம் 

அடுத்து செவ்வாய் ........

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

மனைவி அமையும் விதம் – சூரியன்



வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொருவருக்கும் மனைவி எப்படி அமைவார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதன் படி, 

சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சூரியனாக அமைந்தால் ஜாதகரின் மனைவி, 

உங்கள் வீட்டினை ஆளக் கூடியவராக இருப்பார்.

நிர்வாக திறன் கொண்டவராக இருப்பார்.

கணவருக்கு ஆதரவாக செயல்படக் கூடியவராக இருப்பார்.

அடுத்து சந்திரன் ........

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

Tuesday, 15 December 2015

பிதுர் மோட்சபுரித் தலம்



சிஷ்யன்: குருவே, மனிதர்களுக்கு இறப்பு பல விதங்களில் வருகின்றது. சிலர் பலவிதமான உபாதைகளுடன், மன வேதனைகளுடனோ அல்லது விபத்தினாலோ உயிர் இழக்கின்றனர். அவர்கள் நற்கதி அடைய அவரை சார்ந்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறையினை கூறுங்கள்.

குரு: சிஷ்யா, மக்களின் நற்கதிக்காக நீ இன்று கேட்டது மிகச் சிறப்பான கேள்வி. சொல்கிறேன் கேள். மதுரை அருகே திருபூவனம் என்ற ஊரில் உள்ள சிவதலத்தில் அமைந்திருக்கும் மாணிகர்ணிகைத் தீர்த்தம், வைகைத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் போன்ற காசிக்கு நிகரான பலவிதத் தீர்த்தங்களில் மாதந்தோறும் அமாவசை, இறந்தவருடைய திதி, மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்து, இறந்தவருக்கு பிடித்த உணவை அன்னதானம் செய்து வருவதால் நோயாலும், விபத்தாலும், வேதனையாலும் இறந்தவருக்குத் தக்க நற்கதி கிடைக்கும். 

சிஷ்யன்: குருவே, தாங்கள் இந்த திருத்தலத்தினை காசி மற்றும் கயைக்கு இணையானது இன்று கூறினீர்கள். ஏன், சுவாமி?

குரு: அது, இந்த திருத்தலத்தில் தான் பல உத்தமர்களின் சாம்பலானது ( எலும்புச் சாம்பல்) பூவாகவும், சிலையாகவும், மாறிற்று என்பதனால் இத்தீர்த்தங்களுக்கு காசி, கயைக்கு நிகரான பல பித்ரு சக்திகள் உண்டு. 

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117  

Saturday, 12 December 2015

திதிகள் – பாகம் 6



திதிகள் உணவு வகைகள் 

கீழ்க்கண்ட உணவைச் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்டிட அற்புதமான முறையில் சர்க்கரை வியாதிக்கு (DIABETES) நிவாரணம் கிட்டும். 

பிரதமை – வாழைத்தண்டு பொரியல் 

துதியை – கோவைக்காய் பொரியல் 

திருதியை – சிறுகீரை (பருப்புடன் மிதமான வறுவல்)

சதுர்த்தி – வாழைப்பூ பொரியல் / கறி  

பஞ்சமி – நூல்கோல் (வேக வைத்து உண்ணுதல்)

சஷ்டி – அவரை பொரியல் 

சப்தமி – பிடியளவு துளசி + மிளகு 

அஷ்டமி – ஒரு நெல்லிக்காய் வற்றல் + ஜலம் 

நவமி – வெந்தயக் கீரை கூட்டு 

தசமி – பாகற்காய் கூட்டுப் பொரியல் 

ஏகாதசி – சுண்டைக்காய் கூட்டு 

துவாதசி – முள்ளங்கியை வேக வைத்து உண்ணுதல் 

திரயோதசி – 21 வில்வ இலை + மிளகு + மாலையில் 
மாதுளம் பழச்சாறு   

சதுர்தசி – அகத்திப் பூ பொரியல் 

அமாவாசை / பெர்ணமி  - நீராக் கீரை கூட்டு 

அந்தந்த திதியில் காலை உணவு இதுவே. மாதியம், இரவு அவரவர் விருப்பம் போல் உண்ணலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117 

Friday, 11 December 2015

திதிகள் - பாகம் 5


சூன்ய திதிகள்
வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொரு ராசிக்கும் சில தகாத சூன்ய திதிகள் உண்டு. பொதுவாக அனைவரும் அவர் அவருக்கு உண்டான சூன்ய திதி நாட்களில் திருமணம்/புதுமனை புகுதல், வியாபார துவக்கம் போன்ற நல்ல காரியங்களை செய்யாக் கூடாது.
ஆனால் இந்த நாட்களில் கோயில் வழிபாடு, பூஜை போன்ற இறை வழிபாடுகளைத் தாராளமாக செய்யாலாம்.
இங்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உண்டான சூன்ய திதிகளை கொடுத்துள்ளேன்.
மேஷம் – சஷ்டி
ரிஷபம் – சதுர்த்தி,திரயோதசி
மிதுனம் – பஞ்சமி,அஷ்டமி,சதுர்த்தசி
கடகம் – சப்தமி
சிம்மம் – திருதியை, சஷ்டி, நவமி,திரையோதசி
கன்னி – பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம் – பிரதமை, துவாதசி
விருச்சிகம் – தசமி
தனுசு – துவிதியை, சப்தமி, எகாதசி, சதுர்த்தசி
மகரம் – பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம் – சதுர்த்தி
மீனம் – துவிதியை, எகாதசி, சதுர்த்தசி
சூன்ய திதி நாட்களில் முடிந்தவர்கள் கூட்டாக விஷ்ணு சகஸ்ரநாமம், கால பைரவர் துதி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைப் பாராயாணம் செய்தால் சூன்ய திதிகளின் தீய விளைவுகளைத் தணிக்கலாம்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

திதிகள் – பாகம் 4


திதிகளை கீழ்க்கண்டவாறு பிரித்து உள்ளனர்.
 .
1.குருட்டு திதி
2.ஒரு கண்ணுள்ள திதி
3.இரு கண்ணுள்ள திதி
4.நந்தை திதி
5.பத்ரை திதி
6.சபை திதி
7.பூரண திதி

1.குருட்டு திதி என்பது
தேய்பிறையில் வரும் ஏகாதசி,துவாதசி,த்ரியோதசி,சதுர்தசி,அமாவசை .

2.ஒரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் அஷ்டமி, நவமி
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, சதுர்தசி.

3.இரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி , சப்தமி .
வளர்பிறையில் வரும் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி , திரியோதசி
4.நந்தை திதி என்பது பிரதமை, சஷ்டி, ஏகாதசி

5.பத்ரை திதி என்பது துவிதியை, சப்தமி, துவாதசி

6.சபை திதி என்பது திரிதியை, அஷ்டமி, திரயோதசி

7.பூரண திதி என்பது பஞ்சமி, தசமி, பௌர்ணமி .

குருட்டு திதியில்--சுப காரியம் செய்ய கூடாது.
ஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்

இரு கண்ணுள்ள திதியில்--முழு பலன்

.நந்தை திதியில் - கலைகள், திருவிழா செய்ய

பத்ரை திதியில் - வாகனம் வாங்க ,பிரயாணம் செய்ய
சபை திதியில் - கொடி மரம், பந்தல் கால் நட .
பூரண திதியில் - திருமணம், யாத்திரை செய்ய .

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

திதிகள் – பாகம் 3


தேய்பிறை திதிகள்

வணக்கம் நண்பர்களே!

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.

இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஸ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

திதிகள் – பாகம் 2





வளர் பிறைத் திதிகள்

வணக்கம் நண்பர்களே!

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்கும். அதாவது ௦ பாகையில் இருக்கும். எனவே அன்று சந்திரனை நம்மால் பார்க்க முடியாது. அடுத்த நாள் முதல் சந்திரன் ஒவ்வொரு நாளும் 12 பாகை சூரியனிடம் இருந்து விலகி செல்லும். 15ம் நாள் பௌர்ணமி அன்று சூரியனிடம் இருந்து 180 பாகைகள் விலகி இருக்கும். அன்று சூரியனின் முழுமையான பார்வை சந்திரனின் மேல் விழுகிறது. அன்று சூரியன் இருக்கும் ராசியில் இருந்து சந்திரன் 7 வது ராசியில் இருக்கும்.   

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.
அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும் நாளை  பிரதமை எனவும், துதியை எனவும் மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. என்றும் அழைப்பர்.

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

திதிகள் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும இடையே உள்ள தூரம் ஆகும். திதி என்பது பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். மொத்தம் 30 திதிகள் கடைபிடிக்கப் படுகின்றன.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை, கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை ஆகும்.
1.பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பெளர்ணமி (அல்லது) அமாவாசை.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

பஞ்சாங்கம்


வணக்கம் நண்பர்களே!

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை கொண்டது.

அவை
1.     
            வாரம்
2.       திதி
3.       நட்சத்திரம்
4.       யோகம்
5.       கரணம்

இவையே பஞ்ச அங்கங்களாகும்.

வாரம் என்பது ஞாயிறு முதல் சனிவரை உள்ள 7 கிழமைகள் ஆகும்

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
நட்சத்திரம் என்பது சந்திரன் நிற்கும் இடம் ஆகும்.

யோகம் என்பது வான வெளியில் ஒரு குறிப்பிட இடத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் செல்லும் மொத்த தூரம்.

கரணம் என்பது திதியின் அறைபங்கு ஆகும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

Thursday, 10 December 2015

அன்னதானம்



வணக்கம் நண்பர்களே!

பசி நோய் ஒருவருக்கு வரக் கூடாது என்றால் அவர்கள் அன்ன தானம் செய்ய வேண்டும். அதனால் தான் அன்ன தானத்தை அவ்வளவு விசேஷமாகப் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஒருவர் உயிர் விடும்பொழுது நிம்மதியாக உயிர் போக வேண்டும் என்றால் அன்ன தானம் செய்திருக்க வேண்டும்.

ஒருவர் இறந்த பிறகு செய்ய வேண்டிய தான தர்மத்தினையும் சரியாக செய்ய வேண்டும். அதில் தவறு செய்தால் அடுத்த பிறப்பில் அதன் பலன் கிட்டும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

இறப்பு திதி நிர்ணயம்



வணக்கம் நண்பர்களே!

ஒருவர் இறக்கும் திதியை வைத்துக் கணக்குப் போட்டு பார்த்தால் இத்தனை ஆண்டுகளுக்குள் கற்பச் செல்லிற்குள் போவார் என்று சொல்ல முடியும். பிரம்ம ரகசியத்தில் இதுவும் ஒன்று. ஒருவருடைய இறக்கும் திதியை வைத்துத் தான் அவருடைய அடுத்த பிறவி நிர்ணயம் செய்யப் படுகிறது. இது போல திதிகளில் பல ரகசியங்கள் உண்டு.


நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117