Friday, 11 December 2015

திதிகள் – பாகம் 2





வளர் பிறைத் திதிகள்

வணக்கம் நண்பர்களே!

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்கும். அதாவது ௦ பாகையில் இருக்கும். எனவே அன்று சந்திரனை நம்மால் பார்க்க முடியாது. அடுத்த நாள் முதல் சந்திரன் ஒவ்வொரு நாளும் 12 பாகை சூரியனிடம் இருந்து விலகி செல்லும். 15ம் நாள் பௌர்ணமி அன்று சூரியனிடம் இருந்து 180 பாகைகள் விலகி இருக்கும். அன்று சூரியனின் முழுமையான பார்வை சந்திரனின் மேல் விழுகிறது. அன்று சூரியன் இருக்கும் ராசியில் இருந்து சந்திரன் 7 வது ராசியில் இருக்கும்.   

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.
அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும் நாளை  பிரதமை எனவும், துதியை எனவும் மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. என்றும் அழைப்பர்.

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

No comments:

Post a Comment