சிஷ்யன்: குருவே, மனிதர்களுக்கு இறப்பு பல விதங்களில் வருகின்றது. சிலர் பலவிதமான உபாதைகளுடன், மன வேதனைகளுடனோ அல்லது விபத்தினாலோ உயிர் இழக்கின்றனர். அவர்கள் நற்கதி அடைய அவரை சார்ந்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறையினை கூறுங்கள்.
குரு: சிஷ்யா, மக்களின் நற்கதிக்காக நீ இன்று கேட்டது மிகச் சிறப்பான கேள்வி. சொல்கிறேன் கேள். மதுரை அருகே திருபூவனம் என்ற ஊரில் உள்ள சிவதலத்தில் அமைந்திருக்கும் மாணிகர்ணிகைத் தீர்த்தம், வைகைத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் போன்ற காசிக்கு நிகரான பலவிதத் தீர்த்தங்களில் மாதந்தோறும் அமாவசை, இறந்தவருடைய திதி, மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்து, இறந்தவருக்கு பிடித்த உணவை அன்னதானம் செய்து வருவதால் நோயாலும், விபத்தாலும், வேதனையாலும் இறந்தவருக்குத் தக்க நற்கதி கிடைக்கும்.
சிஷ்யன்: குருவே, தாங்கள் இந்த திருத்தலத்தினை காசி மற்றும் கயைக்கு இணையானது இன்று கூறினீர்கள். ஏன், சுவாமி?
குரு: அது, இந்த திருத்தலத்தில் தான் பல உத்தமர்களின் சாம்பலானது ( எலும்புச் சாம்பல்) பூவாகவும், சிலையாகவும், மாறிற்று என்பதனால் இத்தீர்த்தங்களுக்கு காசி, கயைக்கு நிகரான பல பித்ரு சக்திகள் உண்டு.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment