Saturday, 3 May 2014

சார ஜோதிடம்


சார ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை கணிக்கும் போது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தின் Latitude மற்றும் Langitude இவைகளை கொண்டு 12 பாவங்களின் ஆரம்ப முனைகள் கணிக்கப்படும். பிறந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு Latitude மற்றும் Langitude  ஆகியவற்றில் பெரிதாக மாற்றம் வராது. ஆனால் பிறந்த நேரம் மிக சரியாக இருக்க வேண்டும்.

     ஒருவர் ஜோதிடம் பார்க்க வந்த நேரத்தில் உள்ள சந்திரனின் நிலையானது ஜாதகர் பிறந்த போது உள்ள லக்ன நிலையை காட்டும். அதே போல் ஜாதகம் பார்க்க வந்த நேரத்தின் லக்ன நிலையானது ஜாதகர் பிறந்த போது உள்ள சந்திரனின் நிலையை காட்டும்.

     சந்திரனின் நிலை என்பது சந்திரன் நின்ற நட்சத்திரம், புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் என்ற நிலைகள் ஆகும். அதாவது ஜாதகம் பார்க்க வரும் ஜாதகரின் கேள்விக்குரிய பாவத்தை தெளிவாக காட்டும்.

     மேலும் ஜாதகர் சந்திரன் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் எந்த ஆரம்ப முனைகளுடன் தொடர்பு கொள்ளுகின்றதோ அந்த பவ சம்மந்தமான கேள்விகளை கேட்பார்.

     மேலும் சார ஜோதிட முறையில் ஜோதிடம் கணிக்கும் போத்து பிறந்த நேரத்தில் ஒரு சில நிமிடம் கூட்டியோ அல்லது கழித்தோ ஜாதகம் மிகத்துல்லியமாக கணிக்கப்படுகின்றது.

     மேலும் சார ஜோதிடதினை பற்றி என்னுடைய குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் திரு. A. தேவராஜ் அவர்கள் “கொடுப்பினையும் தச புத்திகளும்” என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அடியவன் இங்கு என்னுடைய குருநாதரிடம் இருந்து கற்றவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்.


 ஜோதிட ரீதியான தொடர்புக்கு :

ஜோதிஷ ஆதித்யா SU.Suresh


No comments:

Post a Comment