Monday, 30 May 2016
Sunday, 29 May 2016
Saturday, 28 May 2016
Thursday, 26 May 2016
Tuesday, 24 May 2016
Friday, 20 May 2016
Thursday, 19 May 2016
Wednesday, 18 May 2016
Tuesday, 17 May 2016
Monday, 16 May 2016
Wednesday, 11 May 2016
Saturday, 7 May 2016
Tuesday, 3 May 2016
வில்வ மர விநாயகர்
வணக்கம் நண்பர்களே!
வில்வ மரத்தடி விநாயகர் தெற்கு நோக்கி இருப்பின்
சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று தானமாக அளித்து வில்வ மர விநாயகரை அடிப்
பிரதட்சணம் செய்து வர பிரிந்த கணவன் மனைவி ஒற்று சேர்வர். பிள்ளைகள் வில்வ
விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தானம் அரைத்து இட்டுவர படிப்பில்
விருப்பம் கொள்வர்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
வேப்பமரத்தடிப் பிள்ளையார்
வணக்கம் நண்பர்களே!
கிழக்கு முக விநாயகர் விஷேசம் நிறைந்தவர்.
உத்தரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு (தேங்காய் எண்ணை + நல்லெண்ணெய் +
இலுப்பெண்ணை + விளக்கெண்ணை + பசு நெய்) பஞ்சதீபம் எனப்படும் ஐந்து விதமான எண்ணை
தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும்.
ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் விருத்தியாகும்.
மைத்துனி / நாத்தனார் / மாமியாரின் கொடுமைகள் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின்
கொடுமைகள் தீரும். அலுவலகத்தில்
மேலதிகாரியின் அடிமையாகக் செயல் புரியும் நிலை அகலும். பாகற்காய் கலந்த உணவை தானம்
அளித்தால் விசேஷமானது.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117 வன்னி மர விநாயகர்
வணக்கம் நண்பர்களே!
வன்னி மர விநாயகர் வலஞ்சுழி விநாயகராக இருப்பது
பெரும்பாக்கியம். வடக்கு நோக்கி இருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம்
தோறும் வன்னி மர விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக்
கன்னிப் பெண்களுக்கு உரிய தானம் அளித்து வர நல்ல வரன் கிட்டித் திருமணம் கைகூடும்.
வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி மர விநாயகருக்குப் பொறியைப்
படைத்து குழந்தைகளுக்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
Monday, 2 May 2016
Saturday, 30 April 2016
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 6
சந்திரன் + செவ்வாய்
வணக்கம் நண்பர்களே!
உப்பு சுவை அதிகம் பிடிக்கும்.
தாய் வழி நோய் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும்.
சொத்துகளை பெருக்குவது இவர்களின் விருப்பமாக
இருக்கும்.
உடலில் நோய் தாக்கம் எளிதாக நடக்கும்.
பெண்களாக இருந்தால் மாதவிடாய் பிரச்சினை உண்டு.
இவை குழந்தை பிறப்பை அல்லது தாம்பத்திய வாழ்வில்
சில பிரச்சினைகளை உண்டாகும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 5
சூரியன் + கேது
வணக்கம் நண்பர்களே!
அரசு மற்றும் அரசாங்க சம்மந்தப் பட்ட நபர்களால்
பதிப்பு உண்டு.
தந்தை ஆன்மீக வாதி.
சிறுகுடல் பாதிப்பு உண்டு.
இந்த இணைவு உள்ளவர்கள் ஆணோ பெண்ணோ தங்களின்
மாமனார் மற்றும் தந்தையை தங்களுக்குள் (கணவன் மனைவிக்குள்) ஏற்படும் பிரச்சினையை
தீர்க்க உள்ளே விடக் கூடாது. முடிந்த அளவு பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
Wednesday, 27 April 2016
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 3
சூரியன் + சனி
வணக்கம் நண்பர்களே!
இந்த இணைவு இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை.
அதனால் ஆணுக்கு இந்த இணைவு இருந்தால் தந்தையுடன்
கருத்து வேறுபாடு இருக்கும். அதே போல் தன்னுடைய மாமனருடனும் கருத்து வேறுபாடு
இருக்கும்.
தந்தையின் சொத்து கிடைக்காது.
பெண்ணாக இருந்தால் தந்தையுடன் அதிக நட்புடன்
பழகுவார். கணவனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் தந்தைக்கு கொடுப்பார்.
தந்தையுடனேயே வெளியில் செல்ல விருபுவார். இந்த
காரணத்தாலேயே கணவன் மனைவி உறவில் விரிசல் வரும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 2
சூரியன் + குரு
வணக்கம் நண்பர்களே!
இந்த இணைவு இருந்தால் ஜாதகர் கௌரவமான பெரிய
குடும்பத்தில் பிறந்து இருப்பார்.
பூர்வீக சொத்து இவர்களுக்கு கிடைக்காது.
திருமணதிற்கு பிறகு மனைவியை சேர்ந்தவர்களையும்
சேர்த்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு வரும்.
இந்த இணைவுடன் ராகுவோ, கேதுவோ தொடர்பு கொண்டால்
பிதுர் தோஷமாக அமையும். இதனால் கால தாமதமாக திருமணம் நடைபெறும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
Tuesday, 26 April 2016
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 1
சூரியன் + செவ்வாய்
வணக்கம் நண்பர்களே!
சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டு கிரகங்களின் பொதுவான தன்மை சூடு.
இரண்டு வெப்ப கிரகங்கள் இணைவு பெற்ற ஜாதக ஜாதகியரின் உடல் எப்பொழுதும் சூடாகவே
இருக்கும்.
அதிகப்படியான சூடானது குழந்தை பிறப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
தாம்பத்ய வாழ்விலும் பிரச்சினை உண்டு. சண்டை போடும் குணம் அதிகமாக இருக்கும்.
மனைவி அல்லது கணவருடன் இவரால் அன்பாக நடந்து கொள்ளவே முடியாது.
இவரின் கோபத்தால் தான் பார்க்கும் தொழிலை விடக் கூடியவர். தீடீர்
என்று வேலை இல்லாத சூழல் ஏற்படும். வருமானம் பாதிக்கும். அதனால் மனைவி இவரை விட்டு
பிரியும் நிலை உண்டாகும். இரத்தம் மற்றும் தண்டுவடம், கால்சிய
குறைவு தொடர்பான
நோய்களும் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாக திருமண வாழ்வில் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவு
ஏற்படுத்தும் பலன்களை பார்க்கலாம்.
ஜோதிடம் பார்க்க தொடர்பு கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946
90117
Wednesday, 20 April 2016
4. அமிர்த சுவைகள்
பாலில் 22 விதமான அமிர்தச் சுவைகள் உள்ளன.
பாலின் அமிர்தச் சுவையை உணர முடிந்தால் வேறு எந்த உணவையும் மனம் நாடாது. எந்த
அளவிற்குப் பாலைக் காய்ச்சுகின்றோமோ அந்த அளவிற்கு அதிலுள்ள அமிர்தச் சுவைகளும்
விருத்தியாகும்.
அதனால்தான் நன்றாகப் பசும் பாலைக் காய்ச்சி
செய்யப்பட்ட பால்கோவா தானமானது குழந்தைப் பேறின்மை, கடுமையான உடலுருக்கி நோய்கள்
போன்றவற்றிக்கு நிவாரணம் அளிக்கின்றது.
3. உணவு ஒவ்வாமை
ஒருவருக்கு எந்த உணவானது ஒத்துக் கொள்ளவில்லையோ
அல்லது எந்த உணவில் அதிக நாட்டம் கொள்வதால் உடலுக்கு துன்பம் விளைகின்றதோ அந்த உணவைத் தொடர்ந்து
தானமாக அளித்து விந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை
நியதி.
உதாரணமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்புகளைத்
தொடர்ந்து தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
2. நீர் அருந்தும் முறை
காலையில் பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில்
இரண்டு டம்ளர் நீர் அருந்தினால் கழிவு நீர்த் தாரைகள் தூய்மை பெரும்.
நமக்கு வரும் தீய எண்ணங்களில் முக்கால் பங்கு
குடிநீர் மூலமாகவே வருகின்றன. நீரை காய்ச்சி ஆற வைத்து அருந்துவதால் பெரும்பாலான
தீவினைத் துன்பங்களிலிருந்து மீளலாம். நின்று கொண்டோ, நடந்து கொண்டோ நீர்
அருந்துவதைத் தவிர்த்து, அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து நீர் அருந்துவதே நலம்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Sunday, 17 April 2016
மகான்கள்
வணக்கம் நண்பர்களே!
புனிதமான நதிகளை போன்றவர்கள் மகான்கள். நல்லவர்,
தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான புண்ணிய சக்தியை வாரி
வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். அதைப் பயன்படுத்துபவர்களை பொறுத்தே அதன் பயன்கள்
அமைகின்றன.
இந்த அவசர உலகில் நமக்கு ஏது நேரம்?. ஒரு சிறிய
விஷயத்தில் மிகப் பெரிய பலன்கள் இருக்கும். சொன்னால் தெரியும், ஆனால் நாம்
பயன்படுத்த மாட்டோம்.
நம் உடல், மனம், உள்ளத்தை வளப்படுத்தும் சில
முறைகளை எடுத்து கொடுக்கின்றேன். அவற்றில் பல உங்களுக்கு தெரிந்தவையாகவே
இருக்கலாம். அவற்றை முறையாகப் பழகி வந்தால் நாளடைவில் உங்கள் உடலும், மனமும்,
உள்ளமும் புனிதம் அடைந்து நீங்கள் பெரும் நற்சக்திகள் விரயம் ஆகாமல் நல்ல முறையில்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நல்லதொரு சக்தியாக
அமைந்து காக்கும்.
அடுத்துவரும் 21 பதிவுகளும் நம்மை காத்துக்கொள்ள
அருமையான வாய்ப்புகளைத் தரும். முடிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
Subscribe to:
Posts (Atom)