வணக்கம் நண்பர்களே!
திருச்சி அருகே திருமங்கலம் சாமவேதீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள பாண
லிங்க மூர்த்தி ஸ்ரீமங்கள பாவன வகையச் சார்ந்ததாகும். திருமாலின் மார்பில் என்றும்
உறைந்து, விட்டுப் பிரியாது பரந்தாமனிடமே என்றும் நிலைத்து நின்றிட வேண்டி
ஸ்ரீலட்சுமி தேவியே பூஜித்த 1008 சகஸ்ர பாண லிங்க பீடங்களுள் இதுவும் ஒன்றாகும்.
கணவன் மனைவி இருவரும் ஏக பத்தினி விரதராய் புனிதக் கற்புடையோராய்
விளங்கி, தம்பதியர் இடையே மகத்தான அன்பு நிலவிட மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமை
மற்றும் வெள்ளிக் கிழமை தோறும் பாண லிங்கத்திற்கு புனுகு, கஸ்தூரி கலந்த இலுப்பை எண்ணை
காப்பிட்டு, அபிஷேக அராதனைகளுடன் வழிபட்டு
வருதல் வேண்டும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment