வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 8ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த
ஜாதகர் நன்றாக பேச மாட்டார். அவர் பேச்சின் மூலம் பிரச்சினைகளை அனுபவிப்பார்.
குறுக்கு புத்தியுடன் செயல்கள் இருக்கும் என்றும், தெய்வ
அனுகூலம் இருக்காது என்றும் பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 9ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 9ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக மேடைப்பேச்சு பேச
கூடியவராக இருப்பார். 9ம் பாவம் என்பது 7ம் பாவத்தின் பரிணாம பாவமாக உள்ளபடியால் பேச்சானது பலரால்
பாரட்டப்படக்கூடியதாக இருக்கும்.
9ம் பாவத் தொடர்பின் மூலமாக மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று அரசியல்
நடத்துவார். இவருக்கு எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து முடிவு எடுப்பார். பெரிய
பொறுப்பான வேலைகளை செய்யமாட்டார். பெண்கள் தொடர்பு அதிகமாக இருக்கும்.
இவரின் அனைத்து செயல்களிலும் மக்களின் ஆதரவு நிறைய இருக்கும். தெய்வ
அனுக்கிரகம் பெற்றவர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய நிலையை எளிதில்
மாற்றிக்கொள்ள கூடியவர். கட்சி மாற்றம் இருக்கும் இவருடைய அரசியல் வாழ்க்கையில்.
வெளிநாட்டினருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். எந்த ஒரு
செயல்களிலும் முன் யோசனையுடன் செயல்படுவார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment