வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 6ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகர் வெற்றி ஒன்றே குறியாக செயல்படுவார். மேலும் மக்களை சந்திக்க விரும்ப மாட்டார் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 7ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 7ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக மேடைப்பேச்சு பேச கூடியவராக இருப்பார். 7ம் பாவம் என்பது 5ம் பாவத்தின் பரிணாம பாவமாக உள்ளபடியால் பேச்சானது மடை திறந்த வெள்ளம் போல வேகமாக அழகாக பேசக்கூடியவராக இருப்பார்.
7ம் பாவத் தொடர்பின் மூலமாக மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று அரசியல் நடத்துவார். இவர் போகின்ற இடமெல்லாம் அதிக கூட்டம் கூடும். மக்கள் சேவை செய்வதே தனது குறிக்கோளாக கொண்டவர்.
மேலும் 7ம் பாவம் 8ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் அரியலில் ரீதியாக எந்த விதமான அசிங்க அவமானங்களை அடைய மாட்டார்.
5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 7ம் பாவ தொடர்பு கொள்ளுவது அரசியல் மற்றும் கலைத்துறையினருக்கு உன்னதமான அமைப்பு.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment