2ம் பாவத்தின் மூலம் ஜாதகரின் தனநிலையை அறிந்து கொள்ளலாம். 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டால் தனது வாழ்நாள் முழுவதும் பண பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும். 2ம் பாவம் தனக்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் விதி கொடுப்பினை தன நிலை ரீதியில் நன்றாக உள்ளது என கூறலாம்.
மேலும் நடைபெறும் தசா புத்தியானது 2ம் பாவத்திற்கு சாதகமாக இருந்தால் மிகச்சிறப்பான நிலையில் ஜாதகரின் தனநிலை இருக்கும். 2ம் பாவ விதி கொடுப்பினை நன்றாக இருந்து நடைபெறும் தசா புத்திகள் 2ம் பாவத்திற்கு சாதகமற்ற பாவங்களாகிய 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால அந்த கால கட்டங்களில் ஜாதகர் தனது பணத்தை செலவு செய்வார்.
ஆனால் 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் அவரின் கையில் பணம் தங்காது என கூறலாம்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment